By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: யாழ் போதனா மருத்துவமனையில் குழந்தையின் சடலத்துடன் பல மணி நேரம் தவித்த தாய்!
Share
Notification
Latest News
செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
யாழ்ப்பாணம்
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!
யாழ்ப்பாணம்
நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!
தீவகச் செய்தி
யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > யாழ் போதனா மருத்துவமனையில் குழந்தையின் சடலத்துடன் பல மணி நேரம் தவித்த தாய்!
யாழ்ப்பாணம்

யாழ் போதனா மருத்துவமனையில் குழந்தையின் சடலத்துடன் பல மணி நேரம் தவித்த தாய்!

Last updated: 2023/07/25 at 8:31 PM
Published July 25, 2023 654 Views
Share
1 Min Read
SHARE

உயிரிழந்த தனது 9 மாதக் குழந்தையுடன் தாயொருவர் பல மணிநேரம் நோயாளர் காவு வண்டியில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவனையில் காக்க வைக்கப்பட்டமை தொடர்பில் பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

நெடுந்தீவைச் சேர்ந்த 9 மாதக் குழந்தை ஒன்று நேற்று (ஜூலை 24) பால் புரைக்கேறி உயிரிழந்தது. யாழ். போதனா மருத்துவமனை சட்ட வைத்திய அதிகாரியின் ஆலோசனையைப் பெற்றே குழந்தையின் சடலத்தை ஒப்படைக்க முடியும் என்று நெடுந்தீவு வைத்தியசாலை நிர்வாகம் பெற்றோருக்குத் தெரிவித்தது.

யாழ். போதனா மருத்துவமனை சட்ட வைத்திய அதிகாரியை நெடுந்தீவு மருத்துவமனை மருத்துவர் தொடர்பு கொண்டபோது, சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும், சடலத்தை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தாய் குழந்தையின் சடலத்துடன் நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் வந்து, அங்கிருந்து வேலணை பிரதேச வைத்தியசாலை நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்.

நோயாளர் காவு வண்டியில் சடலத்தைக் கொண்டு வந்தமைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கேள்வி எழுப்பப்பட்டதுடன், அந்த நோயாளர் காவு வண்டியிலேயே குழந்தையுடன் சடலத்துடன் தாயைப் பலமணிநேரம் காக்க வைத்துள்ளனர் என்று கூறப்படுகின்றது.

நீண்ட நேர இழுபறியின் பின்னரே தாயை நோயாளர் காவு வண்டியில் இருந்து இறங்க அனுமதித்ததுடன், குழந்தையின் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்காக ஏற்றுக் கொண்டனர் என்றும் குற்றஞ்சாட்டப்படுகின்றது.

நடைமுறைகள் மீறப்பட்டிருந்தாலும் மனிதாபிமானம் இன்றி குழந்தையின் சடலத்துடன் தாயைக் காக்க வைத்தமைக்குப் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தியிடம் கேட்டபோது, இது தொடர்பில் தனக்கு முறைப்பாடு எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார். முறைப்பாடு கிடைத்தால் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டார்.

You Might Also Like

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !

வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

Anarkali July 25, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article சண்டிலிப்பாயில் அறநெறிக்கல்வியின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு!
Next Article வவுனியாவில் ரயில் விபத்தில் இருவர் காயம்!!- பாரவூர்தி சேதம்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!
நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!

You Might Also Like

யாழ்ப்பாணம்

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !

June 25, 2025
யாழ்ப்பாணம்

வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!

June 25, 2025
யாழ்ப்பாணம்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!

June 25, 2025
யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!

June 24, 2025
யாழ்ப்பாணம்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

June 23, 2025
யாழ்ப்பாணம்

சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!

June 23, 2025
யாழ்ப்பாணம்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

June 22, 2025
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

June 22, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?