யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞானப் பீட புதுமுக மாணவன் மீதானபகிடிவதை” எனும் தலைப்பில் நேற்று (மார்ச் 31) இன்று (ஏப்ரல்01) பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி தொடர்பாக இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய காரியாலயமானது 1996 ஆம் ஆண்டின்21 ஆம் இலக்க மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்டத்தின் பிரவு 14 இன்பிரகாரம் ஆணைக்குழுவின் சொந்த பிரேரணையில் அடிப்படையில் கவனம்செலுத்தியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் அறிக்கையிட்டுள்ளார்.
1998 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க கல்வி நிறுவனங்களில் பகிடிவதையையும்வேறுவகையான வன்செயல்களையும் தடை செய்தல் சட்டம், பகிடிவதைசெய்வதானது இலங்கையின் மிகக் கடுமையான குற்றங்களில் ஒன்றாகவும் , பிணை வழங்கப்படாத குற்றமாகவும் பிரகடனப்படுத்தியுள்ளது.
மேலும் பகிடிவதை செய்யும் அல்லது ஊக்குவிக்கும் எந்தவொரு நபரும்பிடியாணை இல்லாமல் கைது செய்யப்படலாம் எனவும் ஏற்பாடுகளைகொண்டுள்ளது.
எனவே யாழ் பல்கலைகழகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மேற்குறித்தபகிடிவதை சம்பவம் தொடர்பில் உடனடி சட்ட நடவடிக்கை எடுத்து அதுதொடர்பிலான அறிக்கையினை எதிர்வரும் ஏப்ரல் 04 வெள்ளிக்கு முன்இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்தியகாரியாலயத்துக்கு அனுப்பிவைக்குமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழகதுணைவேந்தர், கோப்பாய் பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் யாழ்ப்பாணபிராந்திய போலீஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கு குறித்த கடிதம்அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.