யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக வளாகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள கடவுச்சீட்டுஅலுவலக புனரமைப்பு வேலைகள் தொடர்பான முன்னேற்ற கலந்துரையாடல்மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றையதினம் (மே20) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள கடவுச்சீட்டுஅலுவலகத்தின் புனரமைப்பு வேலைகளை விரைவாக நிறைவேற்றி முடிக்கவேண்டிய தேவைப்பாடுகளை மாவட்ட செயலர் வலியுறுத்தினார்.
மேலும், ஒப்பந்தகாரர்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைகளின்முன்னேற்றத்தினை ஒவ்வொன்றாக ஆராய்ந்து உரிய அறிவுறுத்தல்கள்சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கினார்.
இக் கூட்டத்தினைத் தொடர்ந்து, கடவுச்சீட்டு அலுவலகம் அமையவுள்ள இடத்தில்மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைகளை நேரடியாக ஆய்வு செய்ததுடன், வேலைகளை விரைவுபடுத்துவது தொடர்பாகவும் பணிப்புரைகள் வழங்கப்பட்டது.