யாத்திரீகர்களை கொண்டு சென்ற ஒரு பேருந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து நேற்றிரவு (மே 12) அலதெனிய யடிஹலகல பிரதேசத்தில் ஏற்பட்டது.
காயமடைந்தவர்கள் பராகம, கண்டி மற்றும் பேராதனை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.