By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: சர்வதேச விசாரணை கோரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
Share
Notification
Latest News
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
யாழ்ப்பாணம்
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
இலங்கைச் செய்தி
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
தீவகச் செய்தி
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!
வன்னிச் செய்திகள்
சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > சர்வதேச விசாரணை கோரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
இலங்கைச் செய்தி

சர்வதேச விசாரணை கோரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

Last updated: 2023/07/15 at 3:26 AM
Published July 13, 2023 365 Views
Share
1 Min Read
SHARE

இலங்கையில் மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. அங்கு மீட்கப்படும் உடல்கள் யாருடையவை? அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் பொறிமுறைகளில் எமக்கு நம்பிக்கையில்லை. சர்வதேச பொறிமுறையும், சர்வதேச நிபுணர்களும் இதில் தலையிட வேண்டும் என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று(ஜூலை 12) முல்லைத்தீவு நகர சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

srilanka (1)
srilanka (2)

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் தொடர் சுழற்சிமுறைப் போராட்டம் 3 ஆயிரம் நாள்களைக் கடந்துள்ள நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போரில் மக்களைக் கொல்லவில்லை, இனப் படுகொலை நடக்கவில்லை என்று இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாகக் கூறிக் கொண்டிருக்கின்றது.

அவ்வாறிருக்கையில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மனிதப் புதைகுழி எவ்வாறு வந்தது? கொக்குத்தொடுவாயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழி முற்றுமுழுதாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மனிதப் புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட உடல்கள் யாருடையவை? இலங்கை அரசாங்கம் இந்த விடயத்தில் நீதியாகச் செயற்படும் என்று எம்மால் நம்பிக்கை கொள்ள முடியாது. இலங்கையின் பொறிமுறை மீது எமக்கு நம்பிக்கை துளியும் இல்லை.

இந்த விடயத்தில் சர்வதேச பொறிமுறை ஒன்று கொண்டுவரப்பட்டு, சர்வதேச நிபுணர்கள் இதில் தலையிட வேண்டும். கண்டுபிடிக்கப்பட்ட உடல்கள் யாருடையவை என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினர் விசாரணை எனும் பெயரில் எம்மை மிரட்டுகின்றனர். சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காக கண்துடைப்பு விசாரணையை முன்னெடுக்கின்றனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேச விசாரணை ஒன்றே வேண்டும் என்று நாம் வலியுறுத்துகின்றோம் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் து.ரவிகரனும் பங்குபற்றினார்.

You Might Also Like

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

Anarkali July 13, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article நரேந்திர மோடிக்கான கடிதங்களில் ஒன்று நாளை இந்தியத் தூதுவரிடம் கையளிப்பு!
Next Article 200 பாடசாலைகள் வடக்கில் மூடப்பட்டது!- இன்னும் பல பாடசாலைகள் மூடப்படும் அபாயம்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

You Might Also Like

இலங்கைச் செய்தி

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

June 23, 2025
இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

June 20, 2025
இலங்கைச் செய்தி

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?