சுதுமலையில் 1600 போதை மாத்திரைகளுடன் இருவரை மானிப்பாய் பொலிசார்கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது மானிப்பாய் பொலிசாருக்கு கிடைத்தபுலனாய்வு தகவலுக்கமைய மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டுதலில் சுதுமலையில் வைத்து மோட்டார் சைக்கிளில் பயணித்தஇளைஞர் இருவரை வழிமறித்து சோதனையிட்டுள்ளனர்.
இதன் பொழுது இருவகையினை சேர்ந்த 1600 போதை மாத்திரைகளைகைப்பற்றினர். தொடர்ந்து கொக்கோவில் பகுதியில் சேர்ந்த 21 மற்றும் 22 வயதுமதிக்கத்தக்க இரண்டு இளைஞர்களை கைது செய்தனர்.
தொடர்ந்து இன்றைய தினம் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில்முற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிசார்தெரிவித்தனர் .