இலங்கை சமூக பாதுகாப்பு சபையினால் தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில்சித்தியடைந்த மாணவர்களிற்கான கௌரவிப்பு நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
இலங்கை சமூக பாதுகாப்பு சபையினால் மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வுமாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் (மே 25) மாவட்டஅரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில்இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன், அவர்களும், சிறப்பு விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் ஜெயசந்திரமூர்த்திரஜீவன் அவர்களும் கலந்துகொண்டு மாணவர்களுக்கான புலமைப்பரிசில்களைவழங்கியிருந்தார்.
இன்று தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 138 மாணவர்களிற்குபுலமைபரிசில் வழங்கப்பட்டது, இதன்போது 4 மாணவர்களிற்கு 50,000 ரூபாவும், 3 மாணவர்களிற்கு 25,000 ரூபாவும், ஏனையோரிற்கு 5,000 ரூபாவும்வழங்கப்படட்டது.
இந் நிகழ்வில் சமூக பாதுகாப்பு அதிகார சபையின் வடக்கு கிழக்கு சிரேஷ்டஇணைப்பாளர் பா.பிரதீபன், வட மாகாண கல்வி அமைசின் மாகாண பணிப்பாளர்பிறட்லி ஜெராட், வலய கல்வி பணிப்பாளர்கள், பிரதேச செயலர்கள், மாவட்டசெயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், லயன்ஸ் கழக பிரமுகர்கள், தேசிய அபிவிருத்தி வங்கியின் முகாமையாளர், பாதுகாப்பு சபையின் மாவட்டஇணைப்பதிகாரிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும்பெற்றோர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.