By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: புலமைப் பரிசில் பரீட்சை- மேல் முறையீட்டுக்காக விண்ணப்பிக்கலாம்!
Share
Notification
Latest News
யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
யாழ்ப்பாணம்
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வன்னிச் செய்திகள்
வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
தீவகச் செய்தி
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!
நெடுந்தீவு
ஈரான் – இஸ்ரோல் இடையே போர் நிறுத்தம் !
உலகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > புலமைப் பரிசில் பரீட்சை- மேல் முறையீட்டுக்காக விண்ணப்பிக்கலாம்!
இலங்கைச் செய்தி

புலமைப் பரிசில் பரீட்சை- மேல் முறையீட்டுக்காக விண்ணப்பிக்கலாம்!

Last updated: 2025/01/24 at 10:38 AM
Published January 24, 2025 158 Views
Share
2 Min Read
SHARE

2024 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப் பரீட்சை பெறுபேறுகள்தொடர்பான மேன்முறையீடுகளை இணையவழி ஊடாக சமர்ப்பிக்குமாறுபரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி வரைஇதற்கான காலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றுவெளியாகின.

அதற்கமைய, குறித்த பெறுபேறுகளை www.doenets.lk என்றஇணையத்தளத்திற்கு பிரவேசித்து பார்வையிட முடியும்.

புலமைப் பரிசிலை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிக்க கூடியவர்கள்20,000 என்பதுடன், விசேட தேவையுடைய 250 விண்ணப்பதாரிகள் ஏலவேதெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள, பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்என்பவற்றைக் கொண்டு, பாடசாலை பரீட்சை பெறுபேறு ஆவணத்தைதரவிறக்கம் செய்துக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாவட்ட ரீதியானவெட்டுப்புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை கேகாலை, காலி, மாத்தறை, மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் உள்ள தமிழ்மொழிமூல பாடசாலைகளுக்கு 141 என்ற வெட்டுப்புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், நுவரெலியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கானவெட்டுப்புள்ளி 139 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை, புத்தளம், மொனராகலை, அநுராதபுரம், மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் உள்ள தமிழ்மொழிமூல பாடசாலைகளுக்கு 138 என்ற வெட்டுப்புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, இரத்தினபுரி மாவட்டத்தல் உள்ள தமிழ் மொழிமூலபாடசாலைகளுக்கான வெட்டுபுள்ளி 143 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகஇலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை சமூகத்தில்அதிகளவில் பேசுப்; பொருளாக காணப்பட்டது.

குறித்த பரீட்சையின் பகுதி ஒன்று வினாத்தாளின் 3 வினாக்கள் கசிந்தமையேஇதற்கு பிரதான காரணமாகும்.

இதனையடுத்து பெற்றோர்கள் குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டதுடன், அந்த சம்பவத்துடன், தொடர்புடைய மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவர் உள்ளிட்டஇரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

அதேநேரம், குறித்த சம்பவம் தொடர்பில் உயர்நீதிமன்றில் வழக்கு தாக்கல்செய்யப்பட்டது.

இதனையடுத்து குறித்த சம்பவத்தின் உண்மைத் தன்மையை அறியஉயர்நீதிமன்றினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளின்அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தநிலையில், பரீட்சைகள் திணைக்களம் குறித்த பரிந்துரைகளுக்கு அமையசெயற்பட்டு பரீட்சை பெறுபேறுகளை வெளியிட்டுள்ளது.

You Might Also Like

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

SUB EDITOR January 24, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article நயினாதீவு பாடசாலைகளின் புலமைப் பரிசில் பரீட்சை முடிவு!
Next Article 2026 இல் புதிய கல்விச் சீர்திருத்தம் நடைமுறைக்கு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

You Might Also Like

இலங்கைச் செய்தி

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

June 23, 2025
இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

June 20, 2025
இலங்கைச் செய்தி

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?