இளவாலை பொலிஸ் பிரிவிலுள்ள உயரப்புலம் பகுதியில் தனது பிள்ளைக்குஉணவில் கிருமிநாசினியை கலந்து ஊட்டிய தந்தைதலைமறைவாகியுள்ளதுடன்
சிறுமி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகிறமாகவும் இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
6 வயதான சிறுமி உணவு உட்கொண்ட பின் வாயிலிருந்து நுரை வெளியேறிய நிலையில் குடும்பத்தினர் பிள்ளையை உடனடியாக வைத்தியசாலைக்குகொண்டு சென்றுள்ளனர் இதன்போது உணவில் கிருமிநாசினி கலந்துஊட்டியதாலேயே சிறுமிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளமை தெரியவந்து்ளளது.
இதேவேளை உணவூட்டிய தந்தை வீட்டை விட்டு தலைமறைவாகியுள்ளதாகபொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தந்தையை கைது செய்யஇளவாலை பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளதுடன் மேலதிகவிசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.