By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: தீபாவளியின் மகிமை
Share
Notification
Latest News
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
யாழ்ப்பாணம்
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!
வன்னிச் செய்திகள்
நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > கட்டுரைகள் > தீபாவளியின் மகிமை
கட்டுரைகள்

தீபாவளியின் மகிமை

Last updated: 2022/10/24 at 7:33 AM
Published October 24, 2022 378 Views
Share
4 Min Read
SHARE

தமிழர்களின் வாழ்வியலோடு விழாக்கள், பண்டிகைகள், விரதங்கள் பின்னிப்பிணைந்தவை.

அந்த வகையில் மற்றொரு பண்டிகையாக தீபாவளி இன்று வருகிறது. தீபாவளி என்றால் தீபங்களின் வரிசை என்று அர்த்தம்.

‘தீபம்’ என்றால் விளக்கு. ‘ஆவளி’ என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி இருள் நீக்கி ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும்.

தீபாவளி இன்று

2022 ஒக்ரோபர் 24 ஆம் திகதி, ஐப்பசி 7 ஆம் தீபாவளி 2022 தமிழ் திகதி நாள் திங்கட்கிழமை தீபாவளி கொண்டாடப்படுகிறது. அமாவாசை அன்று தான் பொதுவாக தீபாவளி வரும்.

ஆனால் ஒரு சில வருடங்கள் அமாவாசைக்கு முதல் நாளே தீபாவளி வரும். இந்த வருடம் அமாவாசைக்கு முந்தைய நாள் தீபாவளி வருகிறது.

தீபாவளி நல்ல நேரம்

காலை – 6.15 முதல் 7.15 வரை மாலை – 4.45 முதல் 5.45 வரை

தீபாவளி ஏன் கொண்டாடப்படுகிறது? 

தீப ஒளித்திருநாள் என்று அழைக்கப்படும் தீபாவளி இந்துக்கள் மட்டுமல்லாது உலகின் பல்வேறு மக்களும் கொண்டாடுகின்றனர். தீபாவளி ஏன் கொண்டாடப்படுகிறது என்ற உண்மையான வரலாறு நம்மில் பலரும் அறியாத ஒன்று.

தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதற்கு மூன்று விதமான வரலாறுகள் உள்ளன. அந்த மூன்று விதமான தீபாவளி வரலாற்றை இந்த பதிவில் பார்ப்போம்.

முதல் வரலாறு

இராமாயணத்தில் இராமன் இராவணனை அழித்து விட்டு தனது வனவாசத்தையும் முடித்துவிட்டு மனைவி சீதை மற்றும் சகோதரன் லட்சுமணனுடன் அயோத்தி திரும்பினார்.

அந்த நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள். இந்தநாள் தான் தீபாவளி என்று கொண்டாடப்படுகிறது என்று ஒரு சாரார் கூறுகிறார்கள்.

இரண்டாவது வரலாறு

கந்த புராணத்தின் படி சக்தியின் 21 நாள் கேதார கௌரி விரதம் முடிவுற்றநாளை தீபாவளியாக கொண் டாடப்படுகிறது. இந்த விரதம் முடிந்த அன்று தான் சிவன் சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று அர்த்த நாரீஸ்வரர் உருவம் எடுத்தார் என்றும் சொல்லப்படுகிறது.

மூன்றாவது வரலாறு 

பலவரலாறுகளில் நாம் கீழேபார்க்கப் போகிற இந்த மூன்றாவது வரலாறு தான் மக்களால் அதிகம் பேசக் கூடிய தீபாவளி பண்டிகை வரலாறு ஆகும்.

அதிக மக்கள் கூறும் நரகாசுரனை வதம் செய்த வரலாறு. இரண்யாட்சன் என்ற ஓர் அரக்கன் பூமா தேவியை கடத்திக்கொண்டு போய்பாதாளலோகத்தில் மறைத்து வைத்திருந்தான். அப்போது மஹாவிஷ்ணுவராக அவதாரம் எடுத்து, அரக்கர்களிடம் போரிட்டு பூமாதேவியை காப்பாற்றுகிறார். அதனால் ஏற்பட்ட பரிசத்தால் பூமாதேவிக்கு பவுமன் என்ற அரக்க குணம் கொண்ட மனிதன் பிறந்தான்.

நரகாசுரனின் மண்ணுலக ஆட்சியும், பேராசையும் பவுமன் (நரகாசுரன்) பூலோகத்தை ஆட்சி செய்து கொண்டு இருந்தான். அவனுக்கு பேராசை அதிகரித்து விண்ணுலகத்தை ஆட்சி செய்யவிரும்பினான்.

அதற்காக பவுமன் சாகாவரம் வேண்டி பிரம்ம தேவனை நோக்கி கடும் தவம் செய்தான். பிரம்ம தேவன் அவனுக்கு காட்சி தருகிறார்.

நரகாசுரனின் சாகாவரம்

அப்போது பிரம்மதேவன் மனிதனாகப் பிறந்த அனைவரும் ஒரு நாள் இறந்துதான் ஆகவேண்டும் என்று கூறுகிறார். பெற்ற தாய், மகனை கொல்லமாட்டாள் என்ற எண்ணத்தில், என்னை பெற்ற தாயைத் தவிர வேறயாரும் என்னை கொல்லக்கூடாது என்று வரம் வாங்கிக்கொள்கிறான். அதற்கு பிறகுதான் நரகாசுரன் என்ற பெயர் வந்தது.

விண்ணுலக வெற்றி மனிதனாகப் பிறந்து அசுரனாக மாறிய அந்த நரகாசுரன் விண்ணுலகம் போய் தேவர்கள் எல்லோரையும் வெற்றிகொண்டு அவர்களுடைய பெண் குழந்தைகள் 16 ஆயிரத்து 100 பேரைக் கடத்தி வந்து அவனுடைய அந்தப்புரத்தில் சிறை வைத்தான்.

இந்திரனுடைய தாயார் அதிதி அவர்களின் காது, தோடு மற்றும் வருணனுடைய அரசவைகுடையையும் திருடி எடுத்து வருகிறான். அப்போது மகாவிஷ்ணு கிருஷ்ண அவதாரம் எடுத்திருந்தார், பூமாதேவி சத்யபாமா என்ற பெயரில் அவதரித்து கிருஷ்ணரை மணந்து கொள்கிறார். இந்திரன் நரகாசுரனின் செயல்களை கிருஷ்ணரிடம் சொன்னதும், கிருஷ்ணர் சத்தியபாமாவை அழைத்து கொண்டு நரகாசுரனுடன் போர் செய்யக்கிளம்பினார். கிருஷ்ண பரமாத்மாவுக்கும் நரகாசுரனுக்கும் கடுமையான போர் நடந்தது, கிருஷ்ணர் காயமடைந்தது போல் மயங்கி விழுகிறார். அதை பார்த்து கோபமடைந்த சத்யபாமா நரகாசுரன் தனது மகன் என்று தெரியாமல் அம்பு விட்டு தாக்குகிறார்.

நரகாசுரன் இறக்கும் நிலைமைக்கு சென்றுவிடுகிறான். அந்தவேளையில், பூமாதேவியின் அவதாரம் தான் சத்யபாமா என்று அவனுக்கு தெரிகிறது. தன்னுடைய மகனைதன் கையாலே கொன்றுவிட்டதாக எண்ணி சத்யபாமா கண்ணீர் விடுகிறாள். நரகாசுரன் தான் செய்த பாவத்திற்கு மன்னிப்பு கேட்டு, அவனுடைய தாய், தந்தையரிடம் ஒரு வரம் கேட்கிறான். தன்னுடைய இறப்பை துக்கமாக எடுத்துக்கொள்ளாமல் எல்லோரும் சந்தோசமாக கொண்டாடவேண்டும் என்று கேட்கிறான். அதனால் தீபாவளி என்ற பண்டிகை உதயமானது.

இதனால்தான் நரகாசுரனின் இறப்பை, இந்துக்கள் பட்டாசுவெடித்தும், தீபம் ஏற்றியும், கோலமிட்டும், தீபாவளி வாழ்த்துக்களுடனும் கொண்டாடுகின்றனர்.

அனைவருக்கும் தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

(காலைக்கதிர்)



You Might Also Like

உடலுக்கு உணவு, அறிவுக்குக் கல்வி வேண்டுமானால், தியாகம் இன்றி எதையுமடைய முடியாது – மே 01

ஈழத்தின் உயிர்ப்பான சிறு தீவுகள்: புவிசார் அரசியல் வகிபாகமும் அதன் சமூக பொருளாதார வாய்ப்புக்களும் -வை ஜெயமுருகன்-

இலங்கையில் பிறப்பு குறைந்து இறப்பு அதிகரிக்க காரணங்கள் என்ன? இந்த நிலை நாட்டுக்கு சாதகமா… பாதகமா?

சித்திரா பௌர்ணமி விரதச் சிறப்பு!

தையல் ஊசியையும் நூலையும் கொண்டு சிகரம் தொட்ட பெண்!

கிளிநொச்சியின் வரலாற்றுப் பெருந்தகை கா. நாகலிங்கம்

வேண்டுவன அருள்வாள் நயினை நாகபூசணி தாய்!

பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் தீவகப் பிரதேசம்!

SUB EDITOR October 24, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article இலங்கையின் அச்சாறு உணவுக்கு முதலிடம்.
Next Article பார்த்திபன் மகேசு எனும் சிற்பக்கலா வினோதன் கிருபாராணி ஜெயன்பிள்ளை
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

You Might Also Like

கட்டுரைகள்

உடலுக்கு உணவு, அறிவுக்குக் கல்வி வேண்டுமானால், தியாகம் இன்றி எதையுமடைய முடியாது – மே 01

May 1, 2025
கட்டுரைகள்நெடுந்தீவு

ஈழத்தின் உயிர்ப்பான சிறு தீவுகள்: புவிசார் அரசியல் வகிபாகமும் அதன் சமூக பொருளாதார வாய்ப்புக்களும் -வை ஜெயமுருகன்-

September 4, 2024
கட்டுரைகள்

இலங்கையில் பிறப்பு குறைந்து இறப்பு அதிகரிக்க காரணங்கள் என்ன? இந்த நிலை நாட்டுக்கு சாதகமா… பாதகமா?

May 26, 2024
கட்டுரைகள்

சித்திரா பௌர்ணமி விரதச் சிறப்பு!

April 23, 2024
கட்டுரைகள்

தையல் ஊசியையும் நூலையும் கொண்டு சிகரம் தொட்ட பெண்!

November 20, 2023
கட்டுரைகள்

கிளிநொச்சியின் வரலாற்றுப் பெருந்தகை கா. நாகலிங்கம்

October 4, 2023
கட்டுரைகள்

வேண்டுவன அருள்வாள் நயினை நாகபூசணி தாய்!

June 19, 2023
கட்டுரைகள்தீவகச் செய்தி

பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் தீவகப் பிரதேசம்!

March 19, 2023

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?