முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அவர் நேற்று இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், மேலதிக வைத்தியப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வைத்தியசாலைத் தகவல்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது