By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: தமிழர் போராட்டத்தை சர்வதேச விவகாரமாக அங்கீகரியுங்கள்!- ஈழத்தமிழர் பேரவை வலியுறுத்தல்!
Share
Notification
Latest News
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
யாழ்ப்பாணம்
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
இலங்கைச் செய்தி
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
தீவகச் செய்தி
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!
வன்னிச் செய்திகள்
சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > தமிழர் போராட்டத்தை சர்வதேச விவகாரமாக அங்கீகரியுங்கள்!- ஈழத்தமிழர் பேரவை வலியுறுத்தல்!
இலங்கைச் செய்தி

தமிழர் போராட்டத்தை சர்வதேச விவகாரமாக அங்கீகரியுங்கள்!- ஈழத்தமிழர் பேரவை வலியுறுத்தல்!

Last updated: 2023/07/26 at 10:26 AM
Published July 26, 2023 553 Views
Share
2 Min Read
SHARE

தமிழர்களின் போராட்டத்தை உள்நாட்டு விவகாரமாகவன்றி, சர்வதேச விவகாரமாக அங்கீகரிக்குமாறு ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக்கொண்டு இயங்கும் ஈழத்தமிழர் பேரவை ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய சர்வதேச கட்டமைப்புக்களிடம் வலியுறுத்தியுள்ளது.

‘கறுப்பு ஜுலை’ கலவரங்கள் இடம்பெற்று இவ்வருடத்துடன் 40 ஆண்டுகள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில், அதனை முன்னிறுத்தி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே ஈழத்தமிழர் பேரவை மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

1983 ஆண்டு ஜுலை மாதம் இடம்பெற்ற ‘கறுப்பு ஜுலை’ கலவரங்கள் இலங்கையின் வரலாற்றில் மிகமுக்கிய இடம்பிடித்திருக்கும் அதேவேளை, உள்நாட்டு யுத்தத்தில் திருப்புமுனையாகவும் அமைந்தது. இக்கலவரங்கள் யுத்தத்தை மேலும் தீவிரப்படுத்தியதுடன் சிங்கள மற்றும் தமிழ்ச்சமூகங்களுக்கு இடையில் நிலவிய பிளவுகளை ஆழப்படுத்தியது.

கறுப்பு ஜுலை கலவரங்களின்போது தெற்கில் வாழ்ந்த தமிழ்மக்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் காடையர்கள் வசமிருந்தமை, தீயிட்டுக்கொளுத்துவதற்கு வெள்ளைநிற பெற்றோல் கொள்கலன்கள் பயன்படுத்தப்பட்டமை, காடையர்கள்வசம் தாக்குவதற்கு ஏதுவான இரும்புக்கம்பிகள் காணப்பட்டமை ஆகியவற்றின் மூலம் இக்கலவரங்கள் பல வாரகாலமாகத் திட்டமிடப்பட்டுள்ளன என்ற விடயம் வெளிப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழர் தாயகத்திலும் ஏனைய பகுதிகளிலும் 1956 – 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற இனப்படுகொலைகளின் விளைவாக அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தின் 3, 4, 6, 7, 8, 9, 12, 13, 14, 17, 23, 24, 25, 26 உள்ளிட்ட பல சரத்துக்கள் மீறப்பட்டுள்ளன. இருப்பினும் இலங்கையைக் குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கு அவசியமான ஆதாரங்களை சர்வதேச சமூகம் இன்னமும் கண்டறியவில்லை.

கறுப்பு ஜுலை கலவரங்களுக்கு முன்னரும், பின்னரும் சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ்மக்களுக்கு எதிரானதும், அவர்களை அச்சுறுத்தும் வகையிலானதுமான கருத்துக்களை வெளியிட்டுவந்திருக்கின்றனர். பௌத்த தேரர்கள், இலங்கை இராணுவத்தினர், பொலிஸார், சில சிங்கள அமைச்சர்கள் நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கைப் புறக்கணித்துச்செயற்படுகின்றனர்.

அவர்கள் நீதிபதிகளை அவமதிக்கும் அதேவேளை, நீதிமன்றத்தினால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களைப் புறக்கணித்து, மக்கள் மத்தியில் சர்ச்சையைத் தோற்றுவிக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிடுகின்றனர்.

மேலும் அண்மையகாலங்களில் தமிழர் தாயகப்பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ள மனிதப்புதைகுழிகள் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் பல்வேறு சந்தேகங்களையும் அச்சத்தையும் தோற்றுவித்திருக்கின்றன. இத்தகைய மனித உரிமை உரிமை சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச சட்டத்துக்கு அமைவாக விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டியது அவசியமாகும்.

இவ்வாறானதொரு பின்னணியில் தமிழர்களின் போராட்டத்தை உள்நாட்டு விவகாரமாகவன்றி, சர்வதேச விவகாரமாக அங்கீகரிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய சர்வதேச கட்டமைப்புக்களிடம் வலியுறுத்துகின்றோம். அதேபோன்று இலங்கையில் கண்டறியப்பட்ட அனைத்து மனிதப்புதைகுழிகளையும் சர்வதேச நியமங்களுக்கு அமைவாகப் பாதுகாப்பதற்கும், அவைதொடர்பில் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் அவசியமான அழுத்தங்களை அரசாங்கத்துக்கு வழங்குமாறு சர்வதேச அமைப்புக்களிடம் கோருகின்றோம்.

மேலும் துடிப்பான ஜனநாயக சமூகத்தின் இயக்கத்துக்கு அவசியமான ஊடக சுதந்திரத்துக்கு மதிப்பளிப்பதுடன் அதனைப் பாதுகாக்குமாறு அரசாங்கத்தைத் தொடர்ந்து வலியுறுத்துமாறும் கோரிக்கைவிடுக்கின்றோம் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You Might Also Like

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

Anarkali July 26, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article ஜனாதிபதி – அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு நாளை!
Next Article ஜனாதிபதி தலைமையிலான சர்வகட்சிக் கூட்டம் இன்று!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

You Might Also Like

இலங்கைச் செய்தி

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

June 23, 2025
இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

June 20, 2025
இலங்கைச் செய்தி

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?