By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: சேவை நீடிப்பு வழங்கினால் மாகாணசபையை முடக்கிப் போராடுவோம்!- தமிழ் மக்கள் பண்பாட்டு பேரவை சூளுரை!
Share
Notification
Latest News
செம்மணியில் மண் மாதிரிகள் பகுப்பாய்வு!
யாழ்ப்பாணம்
நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தேர்வு நாளை!
நெடுந்தீவு
க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!
இலங்கைச் செய்தி
போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!
இலங்கைச் செய்தி
செம்மணியில் 33 மனித எச்சங்கள் இன்றுவரை!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > சேவை நீடிப்பு வழங்கினால் மாகாணசபையை முடக்கிப் போராடுவோம்!- தமிழ் மக்கள் பண்பாட்டு பேரவை சூளுரை!
யாழ்ப்பாணம்

சேவை நீடிப்பு வழங்கினால் மாகாணசபையை முடக்கிப் போராடுவோம்!- தமிழ் மக்கள் பண்பாட்டு பேரவை சூளுரை!

Last updated: 2023/04/01 at 8:58 AM
Published April 1, 2023 489 Views
Share
2 Min Read
SHARE
வடமாகாண இறைவரித் திணைக்களத்திற்கு ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள பெரும்பான்மையின உயர் அதிகாரிக்கு சேவை நீடிப்பு வழங்கினால் வட மாகாண சபையை முடக்கிப் போராடுவோம் என தமிழ் மக்கள் பண்பாட்டு பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிஷாந்தன் தெரிவித்தார்.
நேற்று(மார்ச் 31) வெள்ளிக்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாண சபையில் தகுதி யுள்ள  தமிழ் அதிகாரிகள் இருக்கின்ற நிலையில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் வடக்கில் தொடர்ச்சியாக நியமிக்கப்பட்ட வருகின்றனர்.
மாகாண இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளராக இருக்கின்ற பந்துள என்பவர் அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றதன் பின் ஒரு வருட சேவை நீடிப்பு வழங்கி  மாகாண இறைவரித் திணைக்களத்துக்கு வடக்கு ஆளுநரின் சம்மதத்துடன் நியமித்தார்கள்.
அவரின் பதவிக்காலம் மார்ச் 31 நேற்றைய தினம் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகின்ற நிலையில் மீண்டும் அவருக்கு சேவை நீடிப்பு வழங்குவதற்கு வடமாகாண பிரதம செயலாளரும் ஆளுநரும் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
வட மாகாணத்தில் தகுதியான அதிகாரிகள் பலர் இருக்கின்ற நிலையில் அனுராதபுரத்தில் இருந்து பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவரை அதுவும் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றவருக்கு சேவை நீடிப்பு வழங்குவதன் நோக்கம் என்ன?
யுத்த காலத்தில் அனைத்து துறைகளிலும் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கடமையாற்றிய நிலையில் சிறந்த நிர்வாகத்தையும் சிறந்த பொறுப்புகளையும் அடைய கூடியதாக இருந்தது.
ஆனால் இன்று தமிழ் அதிகாரிகளை அரசியல்  நோக்கத்துக்காக உயர் பதவிகளில் அமர்த்தாமல் மத்திய அரசு தமக்கு ஏற்ற வகையில் பெரும்பான்மையின் அதிகாரிகளை வடக்கில் நியமனம் செய்கிறது.
உதாரணமாக கூற வேண்டும் என்றால் வட மாகாண சுகாதார பணிப்பாளராக தற்போது கடமை ஆற்றும் திலீப் லியனகேயை விட சேவை மூப்பு கொண்ட தமிழ் அதிகாரிகள் வடக்கில் இருக்கின்ற நிலையில் அவரை நியமித்துள்ளார்கள்.
வடக்கு மாகாண அரசு நிர்வாகங்களில் திட்டமிட்ட முறையில் சிங்கள பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அதிகாரிகளை தொடர்ந்தும் நியமிப்பதை ஆளுநர் தடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால் வட மாகாண சபையை முடக்கிக் கட்சி பேதம் இன்றிப் போராட்டம் நடத்துவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

You Might Also Like

செம்மணியில் மண் மாதிரிகள் பகுப்பாய்வு!

செம்மணியில் 33 மனித எச்சங்கள் இன்றுவரை!

யாழ் மேலதிக மாவட்ட செயலர் (காணி) ஸ்ரீமோகனன் உட்பட பலருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்!!!

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!

மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!

மகஜர் கையளிப்பு!

நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை 07 தொடக்கம் தினசரி சேவை!

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

Anarkali April 1, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article மண்கும்பான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் பரிசில் தினம்!
Next Article சைவ மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண கலந்துரையாடல்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் மண் மாதிரிகள் பகுப்பாய்வு!
நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தேர்வு நாளை!
க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!
போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!

You Might Also Like

யாழ்ப்பாணம்

செம்மணியில் மண் மாதிரிகள் பகுப்பாய்வு!

June 29, 2025
யாழ்ப்பாணம்

செம்மணியில் 33 மனித எச்சங்கள் இன்றுவரை!

June 29, 2025
யாழ்ப்பாணம்

யாழ் மேலதிக மாவட்ட செயலர் (காணி) ஸ்ரீமோகனன் உட்பட பலருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்!!!

June 29, 2025
யாழ்ப்பாணம்

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!

June 28, 2025
யாழ்ப்பாணம்

மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!

June 28, 2025
யாழ்ப்பாணம்

மகஜர் கையளிப்பு!

June 27, 2025
யாழ்ப்பாணம்

நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை 07 தொடக்கம் தினசரி சேவை!

June 27, 2025
யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

June 26, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?