By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: சுற்றுலாத்துறை சேவை நிறுவனங்களை பதிவுசெய்தல் தொடர்பான கலந்துரையாடல்!
Share
Notification
Latest News
நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தேர்வு நாளை!
நெடுந்தீவு
க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!
இலங்கைச் செய்தி
போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!
இலங்கைச் செய்தி
செம்மணியில் 33 மனித எச்சங்கள் இன்றுவரை!
யாழ்ப்பாணம்
யாழ் மேலதிக மாவட்ட செயலர் (காணி) ஸ்ரீமோகனன் உட்பட பலருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்!!!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > சுற்றுலாத்துறை சேவை நிறுவனங்களை பதிவுசெய்தல் தொடர்பான கலந்துரையாடல்!
யாழ்ப்பாணம்

சுற்றுலாத்துறை சேவை நிறுவனங்களை பதிவுசெய்தல் தொடர்பான கலந்துரையாடல்!

Last updated: 2023/04/03 at 11:00 PM
Published April 3, 2023 251 Views
Share
2 Min Read
SHARE

யாழ் மாவட்டத்தின் சுற்றுலாத்துறைச் சேவையை வழங்கும் நிறுவனங்களை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் பதிவு செய்தல் தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் கடந்த 28 ஆம் திகதி இடம்பெற்றது.

யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகமும் இணைந்து இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அனுசரணையுடன் இந்த விழிப்புணர்வு கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் யாழ் மாவட்டத்தில் சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலாத்துறைச்சேவை வழங்கும் நிறுவனங்களை பதிவு செய்தல், அதன் முக்கியத்துவம், எவ்வாறு பதிவு செய்வது, online மூலமாக எவ்வாறு பதிவுகளை மேற்கொள்வது, பதிவு செய்யப்பட்ட சுற்றுலா வியாபாரங்களுக்கான அனுகூலங்கள், பதிவு செய்யப்படாத சுற்றுலா வியாபாரங்களுக்கான சவால்கள் தொடர்பாக விழிப்புணர்வு கருத்துக்கள் வழங்கப்பட்டன.

மாவட்ட அரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கும் போது சுற்றுலாத்துறையில் மேம்படுத்தும்நோக்குடன் சுற்றுலாத்துறை சார்ந்த நிறுவனங்களை சட்டரீதியாக பதிவு செய்வதன் ஊடாக அவற்றை ஒழுங்குபடுத்தலை நோக்காக கொண்டு இக்கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது எனவும் அத்துடன் யாழ் மாவட்டத்தில் காணப்படும் சுற்றுலாத் துறை சேவையை வழங்கும் நிறுவனங்களுள் பதிவுசெய்த நிறுவனங்கள், பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் தொடர்பாக கூறியதுடன், இலங்கை இந்திய போக்குவரத்து விரிவுபடுத்தல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதனால் யாழ்.மாவட்ட சுற்றுலாத்துறையை விரிவுபடுத்த வேண்டியுள்ளது எனவும் கூறினார்.

மேலும் யாழ் மாவட்டத்தில் உள்ள அதிகமான சுற்றுலாத்துறைச் சேவையை வழங்கும் நிறுவனங்கள் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் பதிவுசெய்யப்படவில்லை எனவும் இதனால் இவ் விழிப்புணர்வு கலந்துரையாடல் மூலம் அதிகமாக சுற்றுலாத்துறைச்சேவையை வழங்கும் நிறுவனங்களை பதிவு செய்யக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

இப் பதிவின் மூலம் சுற்றுலாத்துறைச் சேவையை வழங்கும் நிறுவனங்கள் அதிக அனுகூலங்களை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், வடக்கு மாகாண சுற்றுலா பணியக தலைவர், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர், வடக்கு மாகாண சுற்றுலா பணியக உதவிப் பணிப்பாளர் மற்றும் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய திணைக்கள அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், சுற்றுலாத்துறைச் சேவையை வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

You Might Also Like

செம்மணியில் 33 மனித எச்சங்கள் இன்றுவரை!

யாழ் மேலதிக மாவட்ட செயலர் (காணி) ஸ்ரீமோகனன் உட்பட பலருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்!!!

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!

மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!

மகஜர் கையளிப்பு!

நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை 07 தொடக்கம் தினசரி சேவை!

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!

Anarkali April 3, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article ஒட்டுசுட்டானில் பயனாளர்களுக்கு நிலக்கடலை செய்கை ஊக்குவிப்பு!
Next Article அனலைதீவு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தேர்வு நாளை!
க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!
போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!
செம்மணியில் 33 மனித எச்சங்கள் இன்றுவரை!

You Might Also Like

யாழ்ப்பாணம்

செம்மணியில் 33 மனித எச்சங்கள் இன்றுவரை!

June 29, 2025
யாழ்ப்பாணம்

யாழ் மேலதிக மாவட்ட செயலர் (காணி) ஸ்ரீமோகனன் உட்பட பலருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்!!!

June 29, 2025
யாழ்ப்பாணம்

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!

June 28, 2025
யாழ்ப்பாணம்

மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!

June 28, 2025
யாழ்ப்பாணம்

மகஜர் கையளிப்பு!

June 27, 2025
யாழ்ப்பாணம்

நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை 07 தொடக்கம் தினசரி சேவை!

June 27, 2025
யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

June 26, 2025
யாழ்ப்பாணம்

கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!

June 26, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?