By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: சுகாதார சீர்கேடான நிலையில் கந்தப்ப சேகர செட்டியார் வீதி!- பொதுமக்கள் குற்றச்சாட்டு!
Share
Notification
Latest News
நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தேர்வு நாளை!
நெடுந்தீவு
க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!
இலங்கைச் செய்தி
போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!
இலங்கைச் செய்தி
செம்மணியில் 33 மனித எச்சங்கள் இன்றுவரை!
யாழ்ப்பாணம்
யாழ் மேலதிக மாவட்ட செயலர் (காணி) ஸ்ரீமோகனன் உட்பட பலருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்!!!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > சுகாதார சீர்கேடான நிலையில் கந்தப்ப சேகர செட்டியார் வீதி!- பொதுமக்கள் குற்றச்சாட்டு!
யாழ்ப்பாணம்

சுகாதார சீர்கேடான நிலையில் கந்தப்ப சேகர செட்டியார் வீதி!- பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Last updated: 2023/04/02 at 9:49 PM
Published April 2, 2023 378 Views
Share
2 Min Read
SHARE

யாழ் நகர கந்தப்ப சேகர செட்டியார் வீதி சுகாதார மற்றும் கலாச்சார சீர்கேடுகளின் தளமாக காணப்படுகின்றது.

யாழ் மத்திய பேருந்து நிலையத்தையும் புதிதாக அமைக்கப்பட்ட தனியார் பேருந்து நிலையத்தையும் இணைக்கின்ற வீதிக்கு குறுக்கே செல்லும் உள் வீதியே இதுவாகும்.

வைத்தியசாலை வீதியில் உள்ள பிரபல வர்த்தக நிலையங்கள் உணவகங்கள் என்பவற்றின் களஞ்சிய சாலைகளுக்கு செல்லுகின்ற பிரதான பகுதியாக இவ்வீதி காணப்படுகின்றதுடன் புதிய தனியார் பேருந்து நிலையத்திலிருந்து வருகின்ற,செல்கின்ற பயணிகள் மற்றும் தீவுப் பகுதிகளுக்கு செல்வதற்காக பெரும்பாலும் இப்பொது வீதியையே பயன்படுத்தி வருகின்றனர்.

kanthappa sekara seddijar road (6)
kanthappa sekara seddijar road (5)
kanthappa sekara seddijar road (4)
kanthappa sekara seddijar road (2)

இப்பகுதியில் ஒரு அரசு அனுமதி பெற்ற கள் விற்பனை நிலையமும் உள்ளதுடன் இப்பகுதியானது மிகவும் அடர்ந்த பற்றைகளைக் கொண்ட கழிவுகளைக் கொட்டுகின்ற இடமாகவும் சமூக கலாச்சார சீர்கேடுகளை அரங்கேற்றி வரும் இடமாகவும் நீண்ட காலமாக சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவினர் கண்டும் காணாத இடமாகவும் இருந்து வருகிறது.

களஞ்சியசாலைகளில் இருந்துவரும் கழிவுகள், பொது மக்களால் கொண்டு வந்து போடப்படும் கழிவுகளால் இப்பகுதி பெரும் துர்நாற்றம் வீசுகின்ற நிலையில் காணப்படுவதுடன் பெருமளவிலான பற்றைகள் காணப்படுவதால் இரவு நேரங்களில் இப்பகுதி ஊடாக பயணிப்பவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.

யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட இப்பகுதி அதுவும் நகரை அண்டிய பகுதி மிகவும் சுகாதாரச் சீர்கேடான நிலையில் காணப்படுகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.

இதேவேளை அருகில் உள்ள மதுபான நிலையங்களில் மதுபானங்களை கொள்வனவு செய்து இவ் வீதி ஓரத்திலும் பற்றைகளின் மறைவிலும் இருந்து சட்டவிரோதமான முறையில் பாவனை இடம் பெறுதல் மற்றும் கலாச்சார சீர்கேடுகள் இடம் பெறுவதாலும் இவ் வீதியை பயன்படுத்துவதற்கு பொதுமக்கள் அச்சமடைந்த நிலையில் உள்ளனர்.

எனவே சுகாதார சீர்கேட்டுக்கு உள்ளாகியுள்ள இப்பகுதியை யாழ் மாநகர சபையினர் நேரடியாக பார்வையிட்டு சுகாதார சீர்கேட்டுக்கான காரணங்களை கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதுடன் சட்டவிரோத மதுபானவனை மற்றும் சமூகச் சீர்கேடுகளை யாழ் நகர பொலிசார் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இப்பகுதியை பயன்படுத்துகின்ற மற்றும் பாதிக்கப்படுகின்ற இப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளதுடன் இப்பகுதியில் வீதி விளக்குகள் பொருத்தபடவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வீதியூடாக பொதுமக்களின் இயல்பான போக்குவரத்துக்கு ஆவன செய்ய வேண்டும் என்பதே மக்களின் அவாவாக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

You Might Also Like

செம்மணியில் 33 மனித எச்சங்கள் இன்றுவரை!

யாழ் மேலதிக மாவட்ட செயலர் (காணி) ஸ்ரீமோகனன் உட்பட பலருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்!!!

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!

மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!

மகஜர் கையளிப்பு!

நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை 07 தொடக்கம் தினசரி சேவை!

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!

Anarkali April 2, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article தூய அந்தோனியார் ஆலய திருப்பலியின் பின்னரான அன்னதான நிகழ்வு!
Next Article யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உயர் கல்விக் கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தேர்வு நாளை!
க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!
போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!
செம்மணியில் 33 மனித எச்சங்கள் இன்றுவரை!

You Might Also Like

யாழ்ப்பாணம்

செம்மணியில் 33 மனித எச்சங்கள் இன்றுவரை!

June 29, 2025
யாழ்ப்பாணம்

யாழ் மேலதிக மாவட்ட செயலர் (காணி) ஸ்ரீமோகனன் உட்பட பலருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்!!!

June 29, 2025
யாழ்ப்பாணம்

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!

June 28, 2025
யாழ்ப்பாணம்

மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!

June 28, 2025
யாழ்ப்பாணம்

மகஜர் கையளிப்பு!

June 27, 2025
யாழ்ப்பாணம்

நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை 07 தொடக்கம் தினசரி சேவை!

June 27, 2025
யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

June 26, 2025
யாழ்ப்பாணம்

கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!

June 26, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?