முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்தித்துக்கலந்துரையாடியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமானஉதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வெளிப்படுத்தியதகவல் குறித்து அவரிடம் எமது செய்திப்பிரிவு வினவியபோதே சட்டத்தரணிஎன்ற வகையில் தாம் சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்திக்கச் சென்றதாகஉதய கம்மன்பில கூறினார்.
இந்த விடயம் குறித்து கருத்துத் தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்ஆனந்த விஜேபால, சிவநேசதுரை சந்திரகாந்தனின் சட்டத்தரணியாக உதயகம்மன்பில, செயல்பட்டதன் காரணமாக, அவரது கோரிக்கையை நிறைவேற்றஅனுமதி வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் அரை மணிநேரம் கலந்துரையாடும் வாய்ப்பு தமக்குக் கிடைத்ததாக முன்னாள் நாடாளுமன்றஉறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
அதன்போது, தாம் சிறைச்சாலையில் அனுபவித்துவரும் வேதனையான வாழ்க்கைகுறித்து விளக்கியதாகவும் சில சமயங்களில் அவர் கண்ணீர் விட்டு அழுததாகவும்முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறினார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர்சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டமைதொடர்பான விசாரணைகளுக்காக பிள்ளையான் எனப்படும் முன்னாள்இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கடந்த 8 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார்.
அவர் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் 90 நாட்கள்தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்படுகிறார்.