மீசாலை கிழக்கைச் சேர்ந்த 28 வயதுடைய இராசரத்தினம் அபிதாஸ் என்ற இளைஞர் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியிலுள்ள முட்டாஸ் கடை சந்தி அருகில் இன்று (மே 29) இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்தபோது லொறியுடன் மோதுண்டு லொறியின் சில்லினுள் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நேர்காணல் ஒன்றிற்காக சென்றபோதே குறித்த இளைஞன் விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என தெரிவிக்கப்படுகிறது.