By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு கலந்துரையாடல் நடைபெற்றது.
Share
Notification
Latest News
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!
நெடுந்தீவு
ஈரான் – இஸ்ரோல் இடையே போர் நிறுத்தம் !
உலகச் செய்தி
வேலணையில் மாணவர்களுக்கு கல்விசார் உபகரணம் வழங்கும் நிகழ்வு!
தீவகச் செய்தி
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
யாழ்ப்பாணம்
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
இலங்கைச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு கலந்துரையாடல் நடைபெற்றது.
யாழ்ப்பாணம்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு கலந்துரையாடல் நடைபெற்றது.

Last updated: 2025/03/06 at 10:46 PM
Published March 6, 2025 178 Views
Share
2 Min Read
SHARE

வருடாந்த கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு இதுவரை மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட நடவடிக்கைகள் தொடர்பான முன்னேற்பாட்டு கலந்துரையாடல் இன்று (மார்ச் 06) பிற்பகல் 2.30 மணிக்கு, யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் தலைமையில், மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில், எதிர்வரும் மார்ச் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள திருவிழாவிற்கான கடற்படை ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறிப்பிடப்பட்டு, தேவையான உதவிகளை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும், கடந்த கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் மீளாய்வு செய்யப்பட்டதுடன், இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து வந்துகொண்டு செல்லவுள்ள பக்தர்கள் சுமார் 9000 பேர் வரை இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. யாழ்ப்பாணத்திலிருந்து செல்லும் பயணிகள் குறிகாட்டுவான் பகுதியில் பதிவு செய்ய வேண்டும் எனவும், பிற பகுதிகளில் இருந்து செல்லும் பயணிகள் தங்களது பிரதேசங்களிலுள்ள கடற்படை முகாம்களில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.

படகு சேவை கட்டணங்கள் குறித்து தீர்மானிக்கப்பட்டதாவது:

  • குறிகாட்டுவானிலிருந்து கச்சதீவு: ஒருவழிக்கட்டணம் ரூ.1300.00
  • நெடுந்தீவிலிருந்து கச்சதீவு: ஒருவழிக்கட்டணம் ரூ.1000.00

இதில், 25 சாரணர்கள் திருவிழாவில் ஈடுபடுத்தப்படும் எனவும், கடற் போக்குவரத்துக்கான படகுகள், அவற்றின் சேவை நேரங்கள் போன்ற விடயங்கள் கடற்படை அதிகாரிகளுடன் விரிவாக கலந்துரையாடப்பட்டன.

பக்தர்களுக்கான 14ஆம் திகதி இரவு உணவு மற்றும் 15ஆம் திகதி காலை உணவுக்கான ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன. மேலும்,

  • தங்குமிட வசதிகள்
  • உணவு, பாதுகாப்பு, சுகாதாரம், குடிநீர் வசதிகள்
  • மலசலகூடங்கள், ஒளி, ஒலி வசதிகள்
  • கடல் மற்றும் தரைப் போக்குவரத்து ஏற்பாடுகள்
  • ஆலய சூழல் தூய்மை மற்றும் கழிவு முகாமைத்துவம்
  • தொலைத்தொடர்பு வசதிகள் (Dialog, Mobitel)
  • ஊடக அனுமதி

ஆகிய விடயங்கள் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டன.

இந்த கலந்துரையாடலில்,

  • யாழ்ப்பாண மறைமாவட்ட குரு முதல்வர் ஆயர் வணக்கத்துக்குரிய அருட்தந்தை P.J. ஜெபரட்ணம்
  • மேலதிக அரசாங்க அதிபர் (காணி)
  • வட மாகாணப் பிரதி கடற்படை கட்டளை தளபதி
  • மாவட்ட பிரதம கணக்காளர்
  • அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப்பணிப்பாளர்
  • உதவி மாவட்ட செயலாளர்
  • நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர்கள்
  • கடற்படை அதிகாரிகள், பிரதேச சபை பிரதிநிதிகள், யாழ்ப்பாண சாரணர் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

You Might Also Like

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த சுவாமிநாத ஐயர் பலி!

வழுக்கையாற்று புனரமைப்பிற்கான பல்கலைக்கழக மாணவர் ஆய்வு ஆரம்பம் – நிலத்தடி நீர், விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நியமனம்!!

SUB EDITOR March 6, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article ம(னி)தனின் கணக்கு
Next Article பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு – O/L பரீட்சை தொடர்பில்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!
வேலணையில் மாணவர்களுக்கு கல்விசார் உபகரணம் வழங்கும் நிகழ்வு!
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

You Might Also Like

யாழ்ப்பாணம்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

June 23, 2025
யாழ்ப்பாணம்

சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!

June 23, 2025
யாழ்ப்பாணம்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

June 22, 2025
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

June 22, 2025
யாழ்ப்பாணம்

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

June 21, 2025
யாழ்ப்பாணம்

ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த சுவாமிநாத ஐயர் பலி!

June 21, 2025
யாழ்ப்பாணம்

வழுக்கையாற்று புனரமைப்பிற்கான பல்கலைக்கழக மாணவர் ஆய்வு ஆரம்பம் – நிலத்தடி நீர், விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி

June 21, 2025
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நியமனம்!!

June 20, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?