கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா 2025 அல் கடமையாற்றியநெடுந்தீவு பிரதேச செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் இன்றைய தினம் (மார்ச்21) அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களால் கெளரவிக்கப்பட்டதுடன், நெடுந்தீவு பிரதேச செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்களுக்கு அரசாங்க அதிபரால் மெச்சுரை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், கடல்வழிபோக்குவரத்து ஊடாக மேற்கொள்ளப்பட்ட திருவிழா ஒழுங்கமைப்பிற்கும் அங்கு நான்கு நாட்கள் தங்கியிருந்து அர்ப்பணிப்புடன் கடமையாற்றிய நெடுந்தீவுபிரேதச செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்களை ஊக்கப்படுத்துகின்ற செயற்பாடாக இது அமையும் எனவும், அந்தவகையில் நெந்தீவு பிரதேசசெயலாளர், கணக்காளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்களுக்கு தமது நன்றியினைத் தெரிவித்திருந்தார்
இந் நிகழ்வில் பிரதம கணக்காளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், உதவிமாவட்டச் செயலாளர், அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர், நெடுந்தீவுபிரதேச செயலாளர், கணக்காளர் மற்றும் உத்தியோகத்தர்கள்கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.