ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தலைமையிலானகுழுவினர் இன்றையதினம் (ஜூன்25) மாலை செம்மணி மனிதப் புதைகுழிக்குசர்வதேச விசாரணை கோரும் மக்களின் “அணையா விளக்கு”போராட்டத்திற்கு வருகை தந்து அஞ்சலி செலுத்தியதுடன் மக்களுடன் கலந்துரையாடியிருந்தார்.
அத்துடன் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட சித்துப்பாத்தி மயானப் பகுதியினையும் நேரில் சென்று பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரும்மக்கள் செயலின் அணையா விளக்கு போராட்டத்தின் இறுதி நாளான இன்று ஐ.நா மனிதவுரிமை ஆணையாளர் அவர்களிடம் ஆறு அம்சக் கோரிக்கைகள்அடங்கிய செப்புப் பட்டயம் கையளிக்கப்பட்டது.