அரச ஊழியர்கள் பழைய பழக்கவழக்கங்களைக் கைவிட்டு புதியபழக்கவழக்கங்களைத் தழுவ வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும், அவ்வாறுமாறாவிட்டால், தனது அரசாங்கம் மாற்றங்களைச் செய்யத் தயாராகஇருப்பதாகவும் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
இன்று (ஜூன்05) கேகாலையில் நடைபெற்ற உலக சுற்றாடல் தின நிகழ்வில்பங்கேற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
“பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்போம்” முக்கிய கருப்பொருளைமுதன்மைப்படுத்தி “முளைப்பதற்கு இடமளிப்போம்” என்ற தொனிப்பொருளில்நடைபெற்ற இம்முறை உலக சுற்றாடல் தினத்தில் பல சாதகமானநடவடிக்கைகளை எடுக்க முடிந்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும் ஜனாதிபதிகுறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில், பந்துல பெத்தியாவின் வாழ்விடமானது சரணாலயமாகஅறிவிக்கப்படல், நில்கல உள்ளிட்ட புதிய வனப்பகுதிகள் குறித்த நான்குவர்த்தமானிகளை வெளியிடல், சூழல் நேய மாதிரிப் பாடசாலைகள் மற்றும்பசுமைப் புகையிரத நிலையங்களை பாராட்டல் என்பன இடம்பெற்றன.
பொதுவான தேசிய உணர்வின் மூலம் பூமியில் அமைதியைக் கட்டியெழுப்பவேண்டிய பொறுப்பு நமது தலைமுறைக்கு உள்ளது என்பதையும், தேசியஒற்றுமையை உருவாக்க சுற்றாடலைப் பயன்படுத்த முடியும் என்பதையும் நான்இங்கு விளக்கினேன். நமது நாட்டின் அழகிய சுற்றுச்சூழல் அமைப்பை அழித்ததுயரத்திற்கு, இந்த நாட்டின் அரசியல் அதிகாரத்தின் செயல்கள் காரணமாகஅமைந்தன என்றும், அந்த சகாப்தத்தை நாம் முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டோம் என்றும், அதன்படி, தற்போது அதிகாரிகள் மாற வேண்டியஅவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
சுற்றாடலை மீட்டெடுத்து எதிர்கால சந்ததியினருக்கு வழங்குவதற்கானபிரஜைகளின் பொறுப்பையும் இதன்போது ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.