By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: ஊர்காவற்றுறை கோட்டக்கல்வி அலுவலகத்திற்கான தொலைபேசி, மின்சார இணைப்பு அவுட்!
Share
Notification
Latest News
யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
யாழ்ப்பாணம்
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வன்னிச் செய்திகள்
வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
தீவகச் செய்தி
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!
நெடுந்தீவு
ஈரான் – இஸ்ரோல் இடையே போர் நிறுத்தம் !
உலகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > தீவகச் செய்தி > ஊர்காவற்றுறை கோட்டக்கல்வி அலுவலகத்திற்கான தொலைபேசி, மின்சார இணைப்பு அவுட்!
தீவகச் செய்தி

ஊர்காவற்றுறை கோட்டக்கல்வி அலுவலகத்திற்கான தொலைபேசி, மின்சார இணைப்பு அவுட்!

Last updated: 2024/02/23 at 9:02 AM
Published February 23, 2024 925 Views
Share
1 Min Read
SHARE

தீவக கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஊர்காவற்றைறை கோட்டக்கல்வி அலுவலகம் ஊர்காவற்றுறை மத்திய பகுதியில் அமைந்துள்ள றோமன் கத்தோலிக்க தமிழ் ஆண்கள் பாடசாலை வளாகத்திலேயே இயங்கி வருகின்றது.
இந்த நிலையிலே நீண்ட காலமாக தொலைபேசி கட்டணம் செலுத்தப்படாமையால் ஶ்ரீலங்கா ரெலிகொம் தனது தொலைபேசி இணைப்பினை துண்டித்துள்ளது.

அதேவேளை நீண்டகாலமாக மின்சார கட்டண நிலுவை செலுத்தாத காரணத்தினால் மின்சார சபையினரும் அலுவலகத்துக்கான மின் விநியோகத்தினை துண்டித்துள்ளனர்.

இந்த நிலையில் கல்விக்கோட்டம் மற்றும் அதனுடன் இணைந்த பாடசாலை என்பவற்றுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அதற்கான ஆசிரியர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் மின்சார வசதி இல்லையினால் பெரிதும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

இதேவேளை கோட்டக்கல்வி பணிமனைக்கென போட்டோ பிரதி இயந்திரமோ அல்லது கணினி உபகரணங்களோ இல்லாத நிலையிலேயே பணிகள் இடம்பெற்று வருகின்றதுடன், சுகாதார முறைப்படியான கழிப்பறை வசதி கூட இல்லாமையும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

இதே வேளையில் கோட்டக்கல்வி அதிகாரியின் பாவனைக்கென வழங்கப்பட்ட மோட்டார் சைக்கிள் அவரது அலுவலகப் பாவனைக்கு பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதனால் அதனையும் இதுவரை காலமும் திருத்தம் செய்து வழங்காமல் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையிலே ஒரு கல்விக்கான அரச இயந்திரம் கட்டணம் செலுத்தப்படாமல் தொலைபேசி மற்றும் மின்சாரம் என்பன துண்டிக்கப்பட்டு , அடிப்படை மற்றும் பௌதீக வளங்கள் இல்லாத நிலையில் இயங்கி வருகின்ற நிலைமை பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் கவலையினை உண்டாக்கியுள்ளது.

எனவே கல்விதுறை சாரந்த அதிகாரிகள் இவ்விடயத்தில் கூடிய அக்கறை எடுத்து சீரான கல்வி நிர்வாக சேவையினை முன்னெடுக்க முன்வர வேண்டுமென ஆர்வலர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

You Might Also Like

வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.

வேலணையில் மாணவர்களுக்கு கல்விசார் உபகரணம் வழங்கும் நிகழ்வு!

நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!

நயினாதீவில் சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு !

வேலணை பிரதேச சபைத் தவிசாளராக சிவலிங்கம் அசோக்குமார் தெரிவு!

ஊர்காவற்றுறை பிரதேச சபைத் தவிசாளராக அன்னலிங்கம் அன்னராசா தெரிவு!

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவத்தையொட்டி அரை மணிநேரத்துக்கு ஒரு சேவை!

குறிகாட்டுவான் துறைமுக மீளமைப்பு பணி ஆரம்பம்!!

SUB EDITOR February 23, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article 17வது IPL தொடருக்கான அட்டவணை வெளியீடு!
Next Article இளைஞர்கள், யுவதிகள் போட்டித் தன்மை மிக்க உலக சந்தையை வெற்றிபெற தகுந்த சூழல் உருவாக்கப்படும் – ஜனாதிபதி தெரிவிப்பு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

You Might Also Like

தீவகச் செய்தி

வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.

June 24, 2025
தீவகச் செய்தி

வேலணையில் மாணவர்களுக்கு கல்விசார் உபகரணம் வழங்கும் நிகழ்வு!

June 24, 2025
தீவகச் செய்தி

நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!

June 23, 2025
தீவகச் செய்தி

நயினாதீவில் சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு !

June 20, 2025
தீவகச் செய்தி

வேலணை பிரதேச சபைத் தவிசாளராக சிவலிங்கம் அசோக்குமார் தெரிவு!

June 20, 2025
தீவகச் செய்தி

ஊர்காவற்றுறை பிரதேச சபைத் தவிசாளராக அன்னலிங்கம் அன்னராசா தெரிவு!

June 20, 2025
தீவகச் செய்தி

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவத்தையொட்டி அரை மணிநேரத்துக்கு ஒரு சேவை!

June 20, 2025
தீவகச் செய்தி

குறிகாட்டுவான் துறைமுக மீளமைப்பு பணி ஆரம்பம்!!

June 18, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?