ஊர்காவற்றுறையில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல்போயிருந்த யாழ். குருநகர் பகுதியை சேர்ந்த இரு மீனவர்கள் தமிழகத்தின்இராமநாதபுரம் பகுதியில் கரை சேர்ந்துள்ளனர்.
46 வயதுடைய விமலேந்திரன் ஞானராஜ், 54 வயதுடைய பூலோகதாசன்ஆகியோரே கடந்த 15 ஆம் திகதி ஊர்காவற்துறையிலிருந்து கடற்றொழிலுக்குசென்ற நிலையில் காணாமல் போயிருந்தனர்.
குறித்த மீனவர்களை தேடும் நடவடிக்கை துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வந்தநிலையில், தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மீன்பிடிதுறைமுகத்தில் இருந்து குறிப்பிடத்தக்க தூரத்தில் நடுக்கடலில் பைபர் படகில்இலங்கை மீனவர்கள் இருவர் தத்தளிப்பதாக தமிழக கரையோர பொலிஸாருக்குகிடைத்த தகவலின் அடிப்படையில் இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டுசென்றனர்.
இந்நிலையில் மீனவர்கள் தவடர்பில் தமிழக பொலிஸார் விசாரணைகளைநடத்தி வருகின்றனர்.