எதிர்வரும் மே 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சிச் சபைத்தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடைமுறையின் கீழ், இதுவரைபெற்றுள்ள விண்ணப்பங்கள் மற்றும் அஞ்சல் வாக்களிப்பு சீட்டுகள் விநியோகநிலைமைகள் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு இன்று வியாழக்கிழமை(ஏப்ரல்17) ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ளது.
வாக்கெடுப்பு நடத்துவதற்குரிய 339 உள்ளூராட்சிச் சபைகள் தொடர்பாக தபால்மூல வாக்களிப்பு 2025.04.24,25 மற்றும் 28,29 ஆகிய திகதிகளில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.