நாட்டின் பல பகுதிகளில் மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலையானதுஇன்றைய தினம் எச்சரிக்கை மட்டத்தை எட்டக்கூடும் என வளிமண்டலவியல்திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் வெப்பநிலைஅதிகரிக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொது மக்கள் போதியளவு நீர் அருந்துமாறும், இது தொடர்பில்அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், வயோதிபர்கள், சிறுவர்கள் மற்றும் நோயாளர்கள் குறித்தும் மிகுந்தஅவதானம் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.