சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் குழுவொன்று இன்று (மே 11) இலங்கை வரவுள்ளது. இந்தக் குழு எதிர்வரும் 23 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியப் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசனும் அடங்குகின்றார்.
இந்த வருடத்தின் பிற்பகுதியில் முதல் மறு ஆய்வுப் பணிகளுக்கு முன்னதாக இலங்கையுடனான வழக்கமான ஆலோசனைகளின் ஒரு பகுதியாக இந்தக் குழுவின் பயணம் அமைந்துள்ளது.