இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் அங்கஜன் இராமநாதன் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read
யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை இன்று (30.06.2021) மேற்கொண்ட இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் முகம்மட் சாட் கட்டாக் அவர்கள், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள், தற்போதைய கோவிட் 19 காலகட்டத்தில் விவசாயம், கல்வி, கடற்றொழில் மற்றும் தொழில்துறை போன்ற விடயங்களை எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்றும் அதில் உள்ள சவால்கள் தொடர்பிலும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இச் சந்திப்புகளில் இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார
வர்த்தக ரீதியாக எவ்வாறு உறவுகளை வலுப்படுத்தலாம் என்பது தொடர்பிலும் பாகிஸ்தானில் கல்விகற்க விரும்பும் மாணவர்களுக்கு இலவசமாக புலமைப்பரிசில் வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது என மேலும் தெரிவித்தார்.
அதே வேளை யாழ் மாவட்டத்தின் தற்போதைய அபிவிருத்தி, சமகால நிலைமைகள் தொடர்பில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கு காணொளி முறையில் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் திணைக்கள தலைவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) முரளிதரன், திணைக்கள தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Share this Article