By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: இன்று அஞ்சல் மூலம் வாக்களிப்புக்கான இரண்டாவது நாள்!
Share
Notification
Latest News
யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
யாழ்ப்பாணம்
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வன்னிச் செய்திகள்
வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
தீவகச் செய்தி
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!
நெடுந்தீவு
ஈரான் – இஸ்ரோல் இடையே போர் நிறுத்தம் !
உலகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > இன்று அஞ்சல் மூலம் வாக்களிப்புக்கான இரண்டாவது நாள்!
இலங்கைச் செய்தி

இன்று அஞ்சல் மூலம் வாக்களிப்புக்கான இரண்டாவது நாள்!

Last updated: 2024/09/05 at 9:19 AM
Published September 5, 2024 162 Views
Share
1 Min Read
SHARE

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று இரண்டாவது நாளாக நடைபெறுகிறது.

இந்த ஜனாதிபதி தேர்தலில் அஞ்சல் மூலமாக வாக்களிக்க 7,12,319 அரச ஊழியர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

இதற்கமைய, நேற்று (செப் 04) தொடங்கிய அஞ்சல் மூல வாக்களிப்பு, மூன்று நாட்கள் தொடர்ந்து நாளைவரை நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அஞ்சல் மூல வாக்களிப்பின் இரண்டாம் நாளான இன்று, முப்படை முகாம்கள் மற்றும் அனைத்து அரச நிறுவனங்களிலும் வாக்களிக்கவற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், நாளை சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர், சிரேஷ்ட உதவி காவல்துறை அத்தியட்சகர், உதவி காவல்துறை அத்தியட்சகர், காவல்துறை நிலையங்கள், விசேட அதிரடிப்படை முகாம்கள் மற்றும் விசேட காவல்துறை பிரிவுகள் ஆகிய இடங்களிலும் வாக்களிப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும்.

அஞ்சல் மூல வாக்களிப்பு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதற்காக பணியிடங்களில் தேவையான வசதிகளை ஏற்படுத்துவதற்கும், அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

அஞ்சல் மூல வாக்களிப்பில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு எதிர்வரும் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகள் மேலதிக தினங்களாக ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நாட்களில் வாக்களிக்க விரும்புவோர் தங்களின் மாவட்ட செயலகங்களில் அமைக்கப்பட்டுள்ள விசேட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்க வேண்டும்.

அதேவேளை, அலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தி வாக்களிக்கச் செல்லும் போது, அஞ்சல் மூல வாக்குகளை கண்காணிக்கும் அதிகாரியினால் நியமிக்கப்பட்ட அதிகாரி, வாக்காளரின் அடையாளத்தை சரிபார்க்கும் நடவடிக்கையை மேற்கொள்வார்.

இல்லையெனில், அலுவலக அடையாள அட்டையைப் பயன்படுத்தி வாக்களிப்பதற்கான அனுமதி வழங்க வேண்டாம் என, தேர்தல் அலுவலர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், அஞ்சல் மூல வாக்கு நிலையங்களுக்கும், வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் இடங்களுக்கும் விசேட காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர், பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

You Might Also Like

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

SUB EDITOR September 5, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களுக்கு அபராதம் !
Next Article பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி உதயம்
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

You Might Also Like

இலங்கைச் செய்தி

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

June 23, 2025
இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

June 20, 2025
இலங்கைச் செய்தி

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?