இந்தியாவிலிருந்து 242 பேருடன் இன்று (ஜூன் 12) மதியம் 1:38 மணியளவில்லண்டன் நோக்கிப் புறப்பட்ட “போயிங்” பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டசிறிது நேரத்தினுள் குடியிருப்புப் பகுதி ஒன்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் இதுவரை 203 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், அதிலிருந்த பயணிகள்அனைவருமே உயிரிழந்துவிட்டனர் என அஞ்சப்படுவதுடன் , விழுந்து நொருங்கிய கட்டிடத்தில் இருந்தவர்களது நிலை தொடர்பிலும் இதுவரை சரியான தகவல்கள் வெளிவரவில்லை.
இந்தியாவின் மேற்கே அஹமதாபாத்தில் இருந்து லண்டன் கேற்விக் நோக்கிப் பயணித்த போயிங் 787 எயார் இந்திய விமானமேவிபத்துக்குள்ளாகியிருக்கிறது. அதிலிருந்த பயணிகளில் 169 பேர் இந்தியர்கள். 53 பேர் பிரிட்டிஷ் குடிமக்கள் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய சில நிமிடங்களில் மிகக் குறைந்த – சுமார் 625 அடி உயரத்தில் – பறந்துகொண்டிருந்த சமயத்திலேயே அது வீழ்ந்துநொறுங்கியிருக்கிறது.
விபத்துநேர்வதற்குச் சில நொடிகள் முன்பாக விமானத்திலிருந்து அவசர உதவிகோரும் அழைப்பு வந்ததாக ஏயார் இந்திய நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
மருத்துவர்கள் தங்குகின்ற ஒரு விடுதி வீட்டுக் கட்டடத்தின் மேலேயே வீழ்ந்ததுஎன்று முதலில் வெளியான தகவல்கள் தெரிவித்தன. அதனால் தரையில்ஏற்பட்ட சேதங்கள் பற்றிய எந்த விவரங்களும் உடனடியாகக் கிடைக்கவில்லை.
விமானத்தில் 242 பயணிகள் இருந்தனர் இதில் 230 பயணிகள், விமானப்பணியாளர்கள் 10 பேர், விமானிகள் இருவர் என மொத்தம் 242 பேர் இருந்தனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.