கடந்த பெப்ரவரி 20 இல் நெடுந்தீவு கடற்பரப்பில் 2 படகுகளுடன்கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 6 பேரினது வழக்கு இன்று புதன்கிழமை(மார்ச்19) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் நீதவான் நளினி சுபாஸ்கரன்முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இம்மாதம் 05 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதுஇன்றையதினம் வரை இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறுஉத்தரவிடப்பட்டிருந்தது.
இன்றைய தினம் சிறைச்சாலை அதிகாரிகளால் 6 மீனவர்களும் நீதிமன்றத்தில்முற்படுத்தப்பட்டனர். வழக்கினை ஆராய்ந்த நீதவான் 6 பேரில் 4 பேருக்கு ஆறுவருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறை தண்டனை வழங்கிநிபந்தனையுடன் விடுதலை செய்தார்.
இந்த 6 பேரில் இருவர் படகோட்டிகள் என்பதால் அவர்களுக்கு ஆறுமாத கடூழியசிறைத்தண்டனை வழங்கி உத்தரவிடப்பட்டிருந்தது.
அத்துடன் படகோட்டிகள் இருவருக்கும் தலா நான்கு மில்லியன் ரூபா அபராததொகையும் விதிக்கப்பட்டது இதனை செலுத்த தவறின் மேலும் 3 மாத சிறைதண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதவான் நளினி சுபாஸ்கரன்உத்தரவிட்டிருந்தார்.