திருகோணமலையில் யானையுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றுமோதிவிபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரொருவர்உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் திருகோணமலை – ஹொரவபொத்தானை பிரதான வீதி, கன்னியாபகுதியில் நேற்றிரவு (ஏப்ரல்14) இடம் பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் வவுனியா பட்டாணிச்சூர் பகுதியைச் சேர்ந்த முபாரக் நிப்ராஸ்(28வயது) உயிரிழந்துள்ளதாகவும் அவரது நண்பரான சயான் (22 வயது) காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் யானையுடன் மோதியதினால் இந்த விபத்துஇடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்த இளைஞனின் சடலம் திருகோணமலைபொது வைத்தசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.