ஏறாவூர் நீதிமன்றினுள் கைதி தற்கொலை!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஏறாவூர் நீதிமன்றில் சிறைக்கைதியொருவர்  கழுத்தில் தூக்கிட்டுத் தற்கொலைசெய்துகொண்ட சம்பவமொன்று நேற்று (செப்.26) மதியம் பதிவாகியுள்ளதாகஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் மிச்நகர் பிரதேசத்தைச்சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய நபரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாகத்தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் தன்வசம் வைத்திருந்தமை மற்றும் களவு தொடர்பாகஇவருக்கெதிராக ஏழு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு விளக்கமறியலில்வைக்கப்பட்டிருந்த இவர் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டிருந்தார்.

விசாரணைக்கு எடுக்கப்பட்ட வழக்குகளின் பிரகாரம் இவரை மீண்டும்விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று நேற்று உத்தரவிட்டிருந்ததது.

இந்நிலையில் நீதிமன்ற சிறைக்கூட மலசல கூடத்திற்குச் சென்ற இவர் அங்குதூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர் அணிந்திருந்த ாரத்தின் ஒருபகுதியைக் கிழித்து ஜன்னலில் கட்டிமற்றைய பகுதியை கழுத்தில் கட்டி தொங்கிய நிலையில் சடலம்காணப்பட்டுள்ளது.

மலசல கூடத்திற்குச் சென்ற மற்றுமொரு நபர் சடலம் தொங்கியதை அவதானித்துபொலிஸாருக்கு அறித்துள்ளார்.

இதையடுத்து மட்டக்களப்பு மாவட்ட தடயவியல் பொலிஸார் நீதிமன்றிற்குவருகை தந்ததுடன் தடயங்களைச் சேகரித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட சட்ட வைத்தியதிகாரி சடலத்தைப் பார்வையிட்டு அறிக்கைசமர்ப்பித்தார்.

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றின் பதில் நீதிபதி வீ.தியாகேஸ்வரன் சம்பவ இடத்தைநேரடியாகப்பார்வையிட்டு விசாரணைகளை ஆரம்பித்தார்.

Share this Article