தேசிய மக்கள் சக்தியின் முதலாவது வரவு – செலவுத் திட்டம் நிதி அமைச்சர்என்ற வகையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் கடந்த பெப். 17 முற்பகல் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த யோசனைகள் பின்வருமாறு
⭕ இந்த வருடம் 5 வீத பொருளாதார வளர்ச்சியை அடைவதே எதிர்பார்ப்பு
⭕ மூலதனச் செலவுக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியிலிருந்து 4%
தேசிய மேலாண்மை கட்டமைப்புக்காக 750 மில்லியன் ரூபா
⭕ இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலாக டிஜிட்டல் அடையாள அட்டையைவிரைவில் அறிமுகப்படுத்த நடவடிக்கை
⭕ இலங்கை பொருளாதார அதிகார சபை உருவாக்கப்படும்
⭕ கட்டுநாயக்க விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தை ஜப்பானின்நிதியுதவியுடன் விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை
⭕ புதிய மற்றும் கண்டுபிடிப்பு நிதியத்தை ஸ்தாபிக்க 1,000 மில்லியன் ரூபா
⭕ அரசாங்கத்திற்கு சொந்தமான சகல சொகுசு வாகனங்களையும் எதிர்வரும்மார்ச் மாதத்தில் ஏலத்தில் விட நடவடிக்கை
⭕ MPக்களுக்கு வாகனமோ அல்லது வாகன அனுமதிப்பத்திரமோ கிடையாது
⭕ அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் பலன்களை மதிப்பீடு செய்ய குழு
⭕ கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போஷாக்கு சத்துணவு திட்டத்திற்காக 7,500 மில்லியன் ரூபா
⭕ சுகாதாரத் துறைக்காக 604 பில்லியன் ரூபா
⭕ தெரிவுசெய்யப்பட்ட முன்பள்ளிகளின் அபிவிருத்திக்காக 80 மில்லியன் ரூபா
⭕ பாடசாலைகளை அடிப்படை வசதிகளை மேம்படுத்த 1,000 மில்லியன் ரூபா
⭕ முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவு எதிர்வரும் ஜூலை முதல் 1,000 ரூபாவால் அதிகரிப்பு
⭕ மஹபொல மாணவர் உதவித்தொகை 7,500 ரூபாவாக அதிகரிப்பு
⭕ தரம் 5 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 1500 ரூபா நிதியுதவி
⭕ யாழ்.நூலகத்திற்கு கணினிகள் உள்ளிட்ட உபகரணங்களை வழங்க 100 மில்லியன் ரூபா, ஏனைய நூலகங்களின் அபிவிருத்திக்காக 200 மில்லியன் ரூபா
⭕ திருகோணமலையில் 61 எண்ணெய் தாங்கிகளின் கூட்டு அபிவிருத்திக்குநடவடிக்கை
⭕ பெரும்போகத்தில் நெல் கொள்வனவிற்காக 5,000 மில்லியன் ரூபா
⭕ நெல் விநியோக சபை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை
⭕ நீர்ப்பாசனத்துறை அபிவிருத்திக்காக 78,000 மில்லியன் ரூபா
⭕ வடக்கு தெங்கு முக்கோணம் உள்ளிட்ட புதிய தென்னந்தோப்புஅபிவிருத்திக்கு 500 மில்லியன் ரூபா
⭕ சமூக பாதுகாப்பு செலவு (இழப்பீடு) 232.5 பில்லியன் ரூபா
⭕ சிறுநீரக நோயாளிகளுக்கான உதவித்தொகை 10,000 ரூபாவாக அதிகரிப்பு
⭕ முதியோர் உதவித்தொகையை ஏப்ரல் மாதத்திலிருந்து 5,000 ரூபாவாகஅதிகரிக்க நடவடிக்கை
⭕ சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் புனர்வாழ்வு மையங்களில்தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறுவர்கள், ஆதரவற்ற சிறார்களுக்கு 5,000 ரூபாகொடுப்பனவு
⭕ இயற்கை அனர்த்தம் மற்றும் வனவிலங்கு பாதிப்பால் இடம்பெறும்உயிரிழப்புகள், அங்கவீனமடைவோருக்கான இழப்பீட்டு தொகை 10 இலட்சம்ரூபா வரை அதிகரிப்பு
⭕ சிரேஷ்ட பிரஜைகளுக்கு சிறப்பு வட்டி யோசனைத் திட்டம்
⭕ பண்டிகைக் காலத்தில் லங்கா சதொச ஊடாக உணவுப்பொதி
⭕ கொழும்பு நகரை சூழ வசதியான 100 பஸ்கள். 3,000 மில்லியன் ரூபாஒதுக்கீடு
⭕ புதிய பஸ் நிறுவனத்தை ஸ்தாபிக்க நடவடிக்கை
⭕ ரயில் பெட்டிகளை மறுசீரமைக்க 500 மில்லியன் ரூபா
⭕ தனியார் மற்றும் இ.போ.ச பஸ்கள் ஒன்றிணைந்த நேர அட்டவணையில்பயணிக்க யோசனை
⭕ போதையற்ற சமூகத்தை கட்டியெழுப்ப 500 மில்லியன் ரூபா
⭕ ஶ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு நாளாந்த நடவடிக்கைகளுக்காகதிறைசேரியிலிருந்து நிதி ஒதுக்கப்படமாட்டாது
⭕ கிராமங்களில் வீதி அபிவிருத்திக்காக 3000 மில்லியன் ரூபா
⭕ வட மாகாணத்தில் கிராம வீதிகள் மற்றும் பாலங்களின் அபிவிருத்திக்காக5,000 மில்லியன் ரூபா
⭕ பெருந்தோட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக 4,267 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
⭕ மலையக தமிழ் இளைஞர்களின் தொழில்பயிற்சி வாழ்வாதார மற்றும்உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக்காக 2,450 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
⭕ மலையக தமிழ் சமூகத்தின் பாடசாலைக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளுக்காக866 மில்லியன் ரூபா
⭕
கழிவகற்றல் முகாமைத்துவத்திற்காக 750 மில்லியன் ரூபா
⭕ யானை – மனித மோதலை கட்டுப்படுத்த வரவு – செலவு திட்டம் 640 மில்லியனாக உயர்வு
⭕ ”இலங்கையர் நாள்” தேசிய வைபவத்தை நடத்த யோசனை. அதற்காக 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
⭕ அரச ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் 15,750 ரூபாவால் உயர்த்தப்படும்,
அரச சேவையின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 24,250 ரூபாவிலிருந்து40,000 ரூபாவாக 15,750 ரூபாவால் அதிகரிப்பு
⭕ தனியார் துறையில் குறைந்தபட்ச மாத சம்பளம் எதிர்வரும் ஏப்ரல்மாதத்திலிருந்து 27,000 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும்
⭕ பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,700 ரூபாவாகஅதிகரிக்க அரசாங்கம் தலையீடு செய்யும்
⭕ அரச ஊழியர்களுக்கு 8,250 ரூபா அதிகரிப்பை குறைந்தபட்ச மாத சம்பளஅடிப்படையில் மேற்கொள்ள யோசனை