விபத்தில் சிக்கி இளம் ஊடகவியலாளர் உயிரிழப்பு !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஹபரணைதிருகோணமலை வீதியில் அநுராதபுரம், கல்வங்குவ பிரதேசத்தில்இடம்பெற்ற விபத்தில் இளம் ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகபொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று சனிக்கிழமை (மே17) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

வாகனமொன்று இரத்தினபுரியில் இருந்து கந்தளாய் நோக்கிப் பயணித்தமோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின்போது மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞன் சம்பவ இடத்திலேயேஉயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் திருகோணமலை கந்தளாய் பகுதியைச் சேர்ந்த இளம்ஊடகவியலாளர் ஒருவர் ஆவார். இதனையடுத்து விபத்தினை ஏற்படுத்தியவாகனத்தின் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார்தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article