யாழ்ப்பாணத்தில் கடந்த 08 ஆம் திகதி நபரொருவரை கடத்திச் சென்று 84 இலட்சத்து 78 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட சம்பவத்துடன்தொடர்புடைய சந்தேக நபரொருவர் துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்ற போதுகட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்களஅதிகாரிகளால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (பெப். 16) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் யாழ்ப்பாணம் பிரதேசத்தை சேர்ந்து 27 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபர் துபாய்க்கு தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு சென்றிருந்த போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம்பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.