மீண்டும் சடுதியாக உயர்ந்த மசகு எண்ணெய் விலை

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

ஈரானுக்கு எதிரான போர் தொடங்கி ஒரு மாதத்தைக் கடந்த நிலையில், இன்று (30/03) ஆசிய சந்தைகள் திறக்கப்பட்டபோது சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை பாரிய அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

ஒரு பீப்பாய் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் 115.84 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது, இது 2.9% அதிகரிப்பாகும்.

கடந்த பெப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடங்குவதற்கு முன்னர், ஒரு பீப்பாய் எண்ணெய் சுமார் 72 அமெரிக்க டொலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டது.

கடந்த வாரம் மார்ச் 19 அன்று விலை 118 அமெரிக்க டொலராக உச்சம் தொட்டது. வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை இது 112-க்கு சற்று குறைவாக இருந்தது.

எனினும் இது போருக்கு முந்தைய விலையை விட கணிசமான உயர்வாகும்.

இதன்படி, ஒரு பீப்பாய் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெயின் விலை 2.9 சதவீதத்தினால் அதிகரித்து 115.84 டொலராகப் பதிவாகியுள்ளது.

கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு முன்னர், ஒரு பீப்பாய் எண்ணெய் சுமார் 72 டொலர் என்ற அளவிலேயே வர்த்தகம் செய்யப்பட்டது.

எனினும், போர் ஆரம்பமானதில் இருந்து சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

கடந்த வாரம் மார்ச் 19 ஆம் திகதி எண்ணெய் விலை உச்சகட்டமாக 118 டொலர் வரை அதிகரித்திருந்தது.

பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி 112 டொலருக்கும் சற்று குறைவாகக் காணப்பட்ட போதிலும், இன்று காலை வர்த்தகம் ஆரம்பமானதும் மீண்டும் 115 டொலரைத் தாண்டியுள்ளது.

போருக்கு முந்தைய விலையுடன் ஒப்பிடுகையில் இது மிகப்பெரிய அதிகரிப்பு என்பதுடன், உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், ஈரானும் பதில் தாக்குதல்களை ஆரம்பித்துள்ள நிலையில், ஏற்பட்டுள்ள பதற்றங்களுக்கு மத்தியில் மீண்டும் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Share this Article