பிரிட்டிஷ் அரசு கவலை – செம்மணி மனித புதைகுழிகள் தொடர்பில் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

செம்மணி மனித புதைகுழிகள் குறித்து ஆழ்ந்த கவலைகொண்டுள்ளதாகபிரிட்டிஷ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற கேள்வியொன்றிற்கான எழுத்து மூல பதிலில் பிரிட்டிஷ் அரசாங்கம்இதனை தெரிவித்துள்ளது.

இலங்கையில் பொறுப்புக்கூறலிற்கான பிரிட்டிஷ் அரசாங்கத்தின்அர்ப்பணிப்பை மீண்டும் வெளியிட்டுள்ள வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்கதெரின் வெஸ்ட் செம்மணியில் மனித புதைகுழி சமீபத்தில்கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறித்து ஆழ்ந்த கவலை கொண்டிருப்பதாகதெரிவித்துள்ளார்.

இலங்கையில் மனித உரிமைகளிற்கான பொறுப்புக்கூறலிற்கு பிரிட்டன்தொடர்ந்தும் ஆதரவு வழங்குவது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளதாக அவர்தெரிவித்துள்ளார்.

இந்த வருட ஆரம்பத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி உட்படபலரை சந்தித்து உரையாடியதை நினைவுகூர்ந்துள்ள அவர் இலங்கையில்காணாமல்போனவர்களின் உறவுகளுடன் பிரிட்டிஷ் தூதரகம் நெருக்கமானதொடர்புகளை பேணுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

Share this Article