கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் இன்று (ஏப்ரல் 21) நித்திய இளைப்பாறினார்
88 வயதான பாப்பரசர், வத்திக்கானில் உள்ள காசா செண்டா மார்த்தாவில் உள்ளதமது இல்லத்தில் நித்திய இளைப்பாறியதாக செய்தி வெளியிட்டுள்ளன.
சுவாசக் கோளாறு காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக வைத்தியசாலையில்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ், அதன்பின்னர் குணமடைந்து இல்லம் திரும்பியிருந்தார்.
நேற்று (ஏப்ரல் 20) வத்திக்கானில் உள்ள புனித பீட்டர்ஸ் பெசிலிக்காவில்நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு ஆராதனையிலும் அவர் பங்கேற்றிருந்தமைகுறிப்பிடத்தக்கது.