டோக்கியோவில் அரசு ஊழியர்களுக்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை!

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டோக்கியோ பெருநகர் (மெட்ரோ) அரசுஊழியர்களுக்கு வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை எனவும் மூன்றுநாட்கள் விடுமுறை என்ற புதிய பணி அட்டவணை சார்ந்த கொள்கை திட்டத்தைடோக்கியோ ஆளுநர் யூரிகோ கொய்கே அறிவித்துள்ளதாக வெளிநாட்டுஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

உலகிலேயே அதிக மக்கள் வசிக்கும் நகரமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோஉள்ளது. அந்த நாட்டில் பிறப்பு விகிதம் சரிந்த காரணத்தால் மூத்த வயது மக்கள்அதிகம் வசிக்கும் நாடாகவும் உள்ளது.

இந்நிலையில், டோக்கியோ பெருநகர கூட்ட அமர்வில் பேசிய ஆளுநர் யூரிகோகொய்கே,

வேலை செய்யும் முறையை நாம் மறு ஆய்வு செய்ய வேண்டிய சூழலில் உள்ளோம். குழந்தை பிறப்பு மற்றும் பராமரிப்பு போன்ற காரணங்களால் யாரும் தங்கள்பணியை விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்பதை நாம் உறுதிசெய்ய வேண்டும்.தேசம் எதிர்கொண்டுள்ள இந்த சவாலான காலகட்டத்தில் நமதுமக்களின் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் மற்றும் பொருளாதாரத்தையும்பாதுகாத்து, அதை மேம்படுத்துவதும் அவசியம். அந்த வகையில் தேசத்துக்குமுன்மாதிரியாக டோக்கியோ முன்னின்று வழி நடத்த வேண்டிய நேரம் இதுஎனதெரிவித்தார்.

இதனை ஜப்பான் நாட்டின் ஊடக நிறுவனங்கள் உறுதி செய்துள்ளனர்.
அதே போல தொடக்க கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள்முன்கூட்டியே வேலை நேரத்திலிருந்து செல்லும் புதிய கொள்கையும்அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட ஊழியரின் ஊதியம் பிடிக்கப்படும்என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் கடந்த 2023இல் 7.27 இலட்சம்குழந்தைகள் மட்டுமே பிறந்தன. இந்த நிலையில் தான் குடும்ப மற்றும் பணிவாழ்க்கை குறித்து அங்கு பேசப்படுகிறது.

கடந்த 2022இல் வாரத்தில் நான்கு நாட்கள் வேலை செய்யும் சூழல் குறித்துசர்வதேச அளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் பங்கேற்ற ஊழியர்களில்90 சதவீதம் பேர் அதற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். மேலும் 10க்கு 9.1 எனதங்கள் அனுபவத்தை ரேட் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Article