காரைதீவு மாவடிப்பள்ளி பகுதியில் உழவு இயந்திர விபத்து : இன்றுடன் 08 சடலங்கள் மீட்பு !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

காரைதீவு மாவடிப்பள்ளி பகுதியில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போனவர்களில் இதுவரை 08 சடலங்கள்மீட்கப்பட்டுள்ளது. மீட்பு பணியாளர்களால் வெள்ளத்தில் காணாமல்போனவர்களை தொடர்ந்து தேடும் நடவடிக்கை இடம் பெற்று வந்த நிலையில்இன்று (30) காலை இறுதியாக ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

காரைதீவுமாவடிப்பள்ளி பகுதியில் உழவு இயந்திரத்தில் வீடுதிரும்பிக்கொண்டிருந்த மத்ரஸா மாணவர்கள் உள்ளிட்ட பலர் வௌ்ளத்தில்சிக்கி காணாமல் போகியிருந்த நிலையில் அன்றையதினம் மாலை மீட்புப்படையினரின் தேடுதல் நடவடிக்கையின்போது 5 மாணவர்கள் வெள்ளத்தில்இருந்து காப்பாற்றப்பட்டனர்.

இருள் சூழ்ந்திருந்த போதிலும் மீட்புப் படையினரின் தேடுதல் நடவடிக்கைதொடர்ந்து இன்றும் இடம்பெற்று வந்தது. அதன்போது இதுவரை மொத்தமாக 08 சடலங்கள் மீட்புப்பணியாளர்களினால் மீட்கப்பட்டு சம்மாந்துறை ஆதாரவைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதில் நிந்தவூர் காஷிபுல் உலூம் அறபுக் கல்லூரி மாணவர்களின் 06 சடலங்களும், வாகன சாரதியின் சடலமும், இன்னும் ஒரு இளைஞரின்சடலமுமாக மொத்தம் 08 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

மத்ரஸா முடிந்து மாணவர்களும் உழவு இயந்திர சாரதி மற்றும் உதவியாளரும்பயணித்துக்கொண்டிருந்த தருணத்தில் உழவு இயந்திரம் வௌ்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு இந்த விபத்து நடைபெற்றுள்ளது. மீட்பு பணியின் போது விலைஉயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் இரண்டும், உழவு இயந்திரமும்மீட்கப்பட்டதுடன், இதில் பயணித்தவர்கள் எத்தனை பேர், எத்தனை பேர்காணாமல் போனார்கள் என்பதை துல்லியமாக கூற முடியாத நிலை இருந்தநிலையில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டு வருகிறன.

திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் ஜவாஹீர் மரணவிசாரணைகளை மேற்கொண்டதுடன் பிரேத பரிசோதனைகள் முடிக்கப்பட்டுகுடும்பத்தினரிடம் சடலங்கள் கையளிக்கப்பட்டு வருகிறது.

Share this Article