புத்தளம் தலவில மற்றும் நாவக்காடு பகுதிகளில் காவல்துறை மற்றும் விசேடஅதிரடிப்படையினர் நடத்திய கூட்டு சோதனையில், கடல் வழியாக கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படும் சுமார் ரூ.30 மில்லியன் மதிப்புள்ள ஐந்து உயர் சக்திமோட்டார் சைக்கிள்கள் சந்தேக நபர்களுடன் பறிமுதல் செய்யப்பட்டதாககாவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், நாட்டிற்குள் கொண்டு வரதடைசெய்யப்பட்ட 800 மற்றும் 400 எஞ்சின் வலு திறன் கொண்ட நான்குமோட்டார் சைக்கிள்கள் என்றும், எந்த சட்ட ஆவணங்களும் இல்லாமல் மறைத்துவைக்கப்பட்டிருந்த 250 எஞ்சின் வலு திறன் கொண்ட ஒரு மோட்டார் சைக்கிளும்கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
50, 45 மற்றும் 20 வயதுடைய நான்கு சந்தேக நபர்கள் மோட்டார்சைக்கிள்களுடன் கைது செய்யப்பட்டதாக புத்தளம் காவல்துறை சிறப்புஅதிரடிப்படை முகாம் மற்றும் கல்பிட்டி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டது, மேலும் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள், மோட்டார் சைக்கிள்கள் 800, 400 மற்றும் 250 எஞ்சின் வலு திறன் கொண்டவை என்றும் கடல் வழியாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
விசாரணையில் இந்த மோட்டார் சைக்கிள்கள் வீடுகளில் மறைத்துவைக்கப்பட்டிருந்ததாகவும், சில மோட்டார் சைக்கிள்கள் இரவில் ரகசியமாகஓட்டிச் செல்லப்பட்டதாகவும் தெரியவந்தது.
800 மற்றும் 400 எஞ்சின் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் நாட்டில் பதிவுசெய்யப்படவில்லை என்றும், 250 எஞ்சின் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்பதிவு செய்யப்பட்டதாகவும், ஆனால் போலியான இலக்கத் தகடுகள்இருந்ததாகவும் சோதனையில் பங்கேற்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.