இந்தியாவை அடுத்து அமெரிக்காவிலும் Tik Tok தடை!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

அமெரிக்காவில் டிக் டொக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்துதொடரப்பட்ட வழக்கை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

டிக் டொக்எனப்படும், கைப்பேசி செயலி உலகளவில் பிரசித்தம். இசை, நடனம், நடிப்பு உள்ளிட்ட திறமைகளை வெளிக்காட்டும் களமாக இது இருப்பதால் வயதுவித்தியாசம் இன்றி பல்வேறு தரப்பினரும் இதை பயன்படுத்துகின்றனர்.

சீனாவைச் சேர்ந்தபைட்டான்ஸ்என்ற நிறுவனம் இந்த செயலியை நிர்வகித்துவருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த செயலிக்கு இந்திய அரசு தடை விதித்தது.

அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் இந்த செயலியை பயன்படுத்திவருகின்றனர். இந்த செயலிக்கு ஜோ பைடன் அரசு சமீபத்தில் தடை விதித்தது. இந்த தடை இந்த வார இறுதியில் அமுலுக்கு வருகின்றது. இதை எதிர்த்து, அமெரிக்க உச்ச நீதிமன்றத்தி்ல் டிக் டொக் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், இது குறித்து கொண்டு வரப்பட்டசட்டமானது, பேச்சுரிமைக்கான அரசின் கட்டுப்பாடுகள் தொடர்பானஅரசியலமைப்பை மீறவில்லை எனக்கூறியுள்ளது.

இதனால், இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் இந்த செயலிக்கு சிக்கல்ஏற்பட்டுள்ளது.

Share this Article