இந்திய அரசாங்கம், தற்போது சிந்து, சட்லஜ் மற்றும் பியாஸ் நதிகளில் இருந்துபாகிஸ்தானுக்கு செல்லும் நீரை நிறுத்தும் நீண்டகாலத் திட்டத்தைமேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஷ்மீர் மாகாணத்தின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குபதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தைஇடைநிறுத்துவதன் மூலம் இந்திய அரசாங்கம் ஒரு பெரிய நடவடிக்கையைஎடுத்தது.
இதனை தொடர்ந்து, குறித்த தாக்குதலுக்கு பதிலளிக்கும் முகமாக இந்தியாதற்போது இந்த அதிரடி திட்டத்தை செயற்படுத்தவுள்ளதாக தகவல்கள்தெரிவிக்கின்றன.
இந்தத் திட்டத்தின் மூலம் பாகிஸ்தானின் நீர்விநியோகத்தை சீர்குலைக்கும்வகையில் சிந்து நதியின் நீரை திருப்பி மற்ற நதிகளுடன் இணைத்து இந்தியப்பகுதிகளுக்குள் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த நீர் திட்டத்தின் முக்கிய அம்சமாக, சிந்து நதியை ரவி மற்றும் பியாஸ்நதிகளுடன் இணைத்து, சட்லஜ் வழியாக ஹரிகே தடுப்பணைக்கு கொண்டுசெல்லும் வகையில் 200 கிலோமீட்டர் நீளமான, 12 பெரிய சுரங்கப்பாதைகள்கொண்ட கால்வாய் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கால்வாய் இந்தியாவின் உள்நாட்டு நீர் தேவையை பூர்த்தி செய்யும்வகையிலும் அமைக்கப்படுகிறது.
இந்த திட்டம் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு மேம்பட்டநீர்விநியோகத்தை வழங்கும்.
குறிப்பாக, மழைக்குறைவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயத்துக்கும் குடிநீருக்கும் இது ஒரு முக்கிய ஆதாரமாக இருக்கும்.
இந்த திட்டத்தின் மூலம் கங்கை மற்றும் யமுனை நதிகளில் நீர் நிலைகளைஉயர்த்தும் நோக்கமும் உள்ளது. மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட யமுனை நதியின்பகுதிகள் மீண்டும் உயிர் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக கங்கை கால்வாயின் கொள்ளளவை அதிகரித்தல், கசிவை தடுப்பதுபோன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த திட்டம் வெளிப்படையான தாக்குதலாக இல்லாமல், பாகிஸ்தானை“சத்தமின்றி தண்டிக்கும் உத்தி” எனக் கருதப்படுகிறது.
நீர்விநியோகம் குறைய, பாகிஸ்தானில் குடிநீர் மற்றும் விவசாயத் துறைகள்கடுமையாக பாதிக்கப்படலாம். இந்த திட்டம் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில்நிறைவேறும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.