இங்கிலாந்தில் சிறுவர்கள் மரணம்!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இங்கிலாந்தில் கடும் வெப்பநிலை காரணமாக, ஆறுகள் மற்றும் ஏரிகளில் நீந்தச் சென்ற பல குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போது குறைந்தது 4 முதல் 6 பேர் வரை தனித்தனி சம்பவங்களில் இறந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவங்கள் லிங்கன்‌ஷையர், யார்க்ஷையர், வார்விக்‌ஷையர் போன்ற பகுதிகளில் நடந்துள்ளன. வெப்பம் அதிகமாக இருந்தாலும், நீரின் உள்ளக வெப்பநிலை மிகவும் குளிராக இருப்பதால் “cold water shock” ஏற்பட்டு ஆபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

* 12 வயது சிறுவன் ஆற்றில் நீந்தும்போது சிக்கி உயிரிழந்தார்.

* 13 மற்றும் 15 வயது சிறுவர்கள் ஏரிகளில் மூழ்கி இறந்தனர்.

* 16 வயது சிறுமியும் நீரில் சிக்கி உயிரிழந்தார்.

RNLI மற்றும் பாதுகாப்பு அமைப்புகள், வெப்ப காலங்களில் திறந்த நீர்நிலைகளில் கவனமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.

Share this Article
Leave a comment