அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தலாமா வேண்டாமா என்பது தொடர்பில்தெஹ்ரான் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் வெளியுறவு அமைச்சர் குறித்த பேச்சுவார்த்தை குறித்து ஆராய்ந்துவருவதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதற்கு நேர்மாறாக, ஈரானும்அமெரிக்காவும் அடுத்த வாரம் சந்தித்து அணுசக்தி ஒப்பந்தத்திற்குஇணங்குவார்கள் என நேற்று குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், தற்போது அமெரிக்காவுடனான இராஜதந்திரம் தமது நலனுக்குஉகந்ததா என்பதை தெஹ்ரான் மதிப்பிட்டு வருவதாக ஈரான் வெளியுறவுஅமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் புதுப்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கு தற்போது வரை எந்ததீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் அரக்சி குறிப்பிட்டுள்ளார்.