வீடொன்றுக்குள் வைத்து பெண் பிள்ளையொன்றை தகாத முறையில் பேசியயூடியூபர் இன்று (மார்ச்09) முற்பகல் பொலிஸாரிடம் ஒப்படைப்பட்டுள்ளார்.
பண்டத்தரிப்பு பகுதியில் வைத்து ஊர் மக்களால் அவர் மடக்கிப் பிடிக்கப்பட்டு, இளவாளை பொலிஸாரிடம் ஒப்படைப்பட்டுள்ளார்.
குறித்த காணொளியில் காண்பிக்கப்படும் குடும்பத்தினரின் வீட்டுக்கு அந்தயூடியூபர் இன்றையதினம் சென்றிருந்த நிலையில், ஊர் மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள்மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உதவி செய்கின்ற காணொளிகளை பதிவேற்றம் செய்யும் வகையிலான யூடியுப்தளம் ஒன்றினை நடாத்தி வருகின்ற கிருஷ்ணா என்ற குறித்த நபர், பெண்பிள்ளைகளை அவமானப்படுத்துவது போன்று பேசிய காணொளிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.