By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: சர்வதேச மகளிர் தினம் உருவான வரலாறு!
Share
Notification
Latest News
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
யாழ்ப்பாணம்
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
இலங்கைச் செய்தி
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
தீவகச் செய்தி
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!
வன்னிச் செய்திகள்
சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > கட்டுரைகள் > சர்வதேச மகளிர் தினம் உருவான வரலாறு!
கட்டுரைகள்

சர்வதேச மகளிர் தினம் உருவான வரலாறு!

Last updated: 2021/03/08 at 11:16 AM
Published March 8, 2021 718 Views
Share
3 Min Read
SHARE
பெண்களை போற்றும் விதமாக சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் இன்று (மார்ச் 8) கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டத்துக்கு வித்திட்டவர் ஜெர்மனியைச் சேர்ந்த கிளாரா ஜெட்கின் என்ற பெண்மணி.
இந்த சர்வதேச மகளிர் தினம் வெறும் கொண்டாடப்படுவதற்காக மட்டுமே என தற்போதைய காலகட்டம் இருக்கிறது. ஆனால், அவை முழுக்க முழுக்க ஒரு சமூகத்தில் பெண்கள் தங்களது உரிமைக்களுக்காகவும், விடுதலைக்காகவும் பற்பல போராட்டங்களுக்கு பிறகு கிடைக்கப்பெற்ற அங்கீகாரம் என்பதே நிதர்சனம். இந்த நாளுக்காக போராடிய பெண்களில் மிக முக்கியமானவர் கிளாரா ஜெட்கின்.
18ம் நூற்றாண்டில் ஜெர்மனியின் ஓர் கிராமத்தில் பிறந்த இவர், இளம் வயது முதலே பெண்கள் உரிமை மீதும், பெண்கள் நலன் மீதும் மிகுந்த அக்கறை கொண்டவர். பலர் ரஷ்யா, போலந்து நாடுகளில் இருந்து வந்து ஜெர்மனியில் குடியேறி புரட்சிகர சோசலிச அமைப்பை உருவாக்கி செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.
அந்த அமைப்பைச் சேர்ந்த ஓசிப் ஜெட்கின் மூலம் கம்யூனிச சித்தாந்தங்களை நன்கு கற்றறிந்தார் கிளாரா. இருவருக்குள்ளும் நல்ல புரிதல் ஏற்பட்டு இணைந்தனர். 1870ல், சோசலிஸ்ட் இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றினார் கிளாரா. 1878ல் சோசலிஸ்ட்டுகளுக்கு எதிராக தடை கொண்டு வந்த ஜெர்மனிய மன்னர் பிஸ்மார்க், கிளாரா, ஓசிப் ஜெட்கின் உள்ளிட்டோரை அந்நாட்டில் இருந்து வெளியேற்றினார். அதன் பிறகு ஓசிப் ஜெட்கினும், கிளாராவும் பாரிசுக்குச் சென்றனர்.
இருவரும் சமூக போராட்டங்களில் ஈடுபட்டனர். பிற்காலத்தில் ஓசிப் நோய்வாய்ப்பட்டு படுத்தப்படுக்கை ஆனார். பின்னர் 1889ல் ஓசிப் ஜெட்கின் மறைந்த பிறகு தன்னுடைய 2 ஆண் குழந்தைகளுடன் கடுமையான காலகட்டத்தை சந்தித்தார் கிளாரா ஜெட்கின். அந்த சமயத்தில் சர்வதேச மகளிர் மாநாடு 2வது முறையாக பாரிஸ் நகரில் நடைபெற்றது.
அதில், பங்கேற்ற கிளாரா ஜெட்கின் பெண் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும், அவர்களின் பிரச்னைகள் குறித்தும் எட்டுத்திக்கும் ஒலிக்கும் வகையில் பேசியது உலகில் உள்ள அனைத்து பெண் இயக்கங்களுக்கும் மிகப்பெரிய உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளித்தது. அதன் பின்னர், சோசலிஸ்ட்டுகள் மீதான தடையை 1890ல் ஜெர்மனி அரசு நீக்கியதால் கிளாரா மீண்டும் நாடு திரும்பினார்.
அங்கு, பெண்களுக்கு எதிரான அநீதிகளை வெளிக்கொணர்ந்து, பெண்களும் ஆண்களும் சமூகத்தில் சம அளவில் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என உணர்த்தி பல்வேறு பிரசாரங்களில் ஈடுபட்டார் கிளாரா ஜெட்கின்.
1892ம் ஆண்டு தோழி ரோசா லக்சம்பெர்க் உதவியுடன் தொடங்கிய ‘சமத்துவம்’ என்ற பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தார். பெண்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்த பத்திரிகையின் பிரதிகள் தொடக்கத்தில் ஆயிரக்கணக்கிலேயே விற்பனையானது. காலம் போக போக, 1914ல் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பிரதிகள் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இதற்கிடையே, 1907ம் ஆண்டு ஜெர்மனியின் ஸ்டட்கார்ட்டில் உலக சோசலிஸ்ட் பெண்கள் மாநாடு நடைபெற்றது. இதில், கிளாரா ஜெட்கின், பெண்களுக்கும் வாக்குரிமை கொடுக்க வேண்டும் என சூளுரைத்திருந்தார். இது அந்த மாநாட்டில் தீர்மானமாகவும் நிறைவேறியது.
இதன் எதிரொலியாக, தங்களுக்கான வேலை நேரத்தை குறைத்து, ஊதியத்தை உயர்த்தி, வாக்களிக்கும் உரிமையை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி 1908ம் ஆண்டு மார்ச் 8 அன்று, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தொழிற்சாலைகளில் பணிபுரிந்த சுமார் 15 ஆயிரம் பெண்கள், மாபெரும் ஊர்வலத்தை நடத்தினர். இந்த ஊர்வலத்தைத் தொடர்ந்து பணிந்த அமெரிக்க அரசு, அடுத்த ஆண்டே மார்ச் 8ம் தேதியை தேசிய பெண்கள் தினமாக அறிவித்தது.
1910ம் ஆண்டு டென்மார்கின் தலைநகரான கோபன்ஹேகனில் உழைக்கும் பெண்களின் சர்வதேச மாநாடு நடைபெற்றது. இதில், 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் மகளிர் தினத்தை சிறப்புமிக்க நாளாக கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி எழுத்துப்பூர்வமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த நாளை சர்வதேச மகளிர் தினமாகவும் கொண்டாட வேண்டும் என அப்போது கிளாரா ஜெட்கின் வலியுறுத்தினார். இதனையடுத்து, 1911ம் ஆண்டு முதல் டென்மார்க், ஜெர்மனி, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பெண்கள் தினமாக மார்ச் 8ம் தேதியை கொண்டாடினர்.
ஆனால், ஐக்கிய நாடுகள் சபையோ 1975ம் ஆண்டில்தான் மார்ச் 8ம் தேதியை சர்வதேச பெண்கள் தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இருப்பினும், கிளாரா ஜெட்கினின் கோரிக்கைபடி 1911ம் ஆண்டை கருத்தில் கொண்டே கடந்த 2011ம் ஆண்டு நூறாவது சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது.
இன்று உலக அளவில் மகளிர் தினம் அமோகமாக கொண்டாடப்படுகிறதென்றால் அவற்றுக்கெல்லாம் விதை விதைத்தது 1910ம் ஆண்டில் நடைபெற்ற உழைக்கும் பெண்கள் மாநாடுதான் என்பதை இவ்விடத்தில் நினைவு கூர வேண்டும்.
படம்: கிளாரா ஜெட்கின் உடன் (இடது பக்கம்) ரோசா லக்சம்பேர்க்.

You Might Also Like

உடலுக்கு உணவு, அறிவுக்குக் கல்வி வேண்டுமானால், தியாகம் இன்றி எதையுமடைய முடியாது – மே 01

ஈழத்தின் உயிர்ப்பான சிறு தீவுகள்: புவிசார் அரசியல் வகிபாகமும் அதன் சமூக பொருளாதார வாய்ப்புக்களும் -வை ஜெயமுருகன்-

இலங்கையில் பிறப்பு குறைந்து இறப்பு அதிகரிக்க காரணங்கள் என்ன? இந்த நிலை நாட்டுக்கு சாதகமா… பாதகமா?

சித்திரா பௌர்ணமி விரதச் சிறப்பு!

தையல் ஊசியையும் நூலையும் கொண்டு சிகரம் தொட்ட பெண்!

கிளிநொச்சியின் வரலாற்றுப் பெருந்தகை கா. நாகலிங்கம்

வேண்டுவன அருள்வாள் நயினை நாகபூசணி தாய்!

பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் தீவகப் பிரதேசம்!

SUB EDITOR March 8, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article தரம் 01 புதிய மாணவா்களுக்கு சேமிப்பு கணக்கு உருவாக்கப்பட்டது
Next Article மருத்துவமுகாம் சிறப்பாக இடம் பெற்றது.
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

You Might Also Like

கட்டுரைகள்

உடலுக்கு உணவு, அறிவுக்குக் கல்வி வேண்டுமானால், தியாகம் இன்றி எதையுமடைய முடியாது – மே 01

May 1, 2025
கட்டுரைகள்நெடுந்தீவு

ஈழத்தின் உயிர்ப்பான சிறு தீவுகள்: புவிசார் அரசியல் வகிபாகமும் அதன் சமூக பொருளாதார வாய்ப்புக்களும் -வை ஜெயமுருகன்-

September 4, 2024
கட்டுரைகள்

இலங்கையில் பிறப்பு குறைந்து இறப்பு அதிகரிக்க காரணங்கள் என்ன? இந்த நிலை நாட்டுக்கு சாதகமா… பாதகமா?

May 26, 2024
கட்டுரைகள்

சித்திரா பௌர்ணமி விரதச் சிறப்பு!

April 23, 2024
கட்டுரைகள்

தையல் ஊசியையும் நூலையும் கொண்டு சிகரம் தொட்ட பெண்!

November 20, 2023
கட்டுரைகள்

கிளிநொச்சியின் வரலாற்றுப் பெருந்தகை கா. நாகலிங்கம்

October 4, 2023
கட்டுரைகள்

வேண்டுவன அருள்வாள் நயினை நாகபூசணி தாய்!

June 19, 2023
கட்டுரைகள்தீவகச் செய்தி

பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் தீவகப் பிரதேசம்!

March 19, 2023

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?