By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: காஸாவில் உள்ள மருத்துவமனையின் மீது தாக்குதல்! – 500 பேர் பலி!
Share
Notification
Latest News
நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை 07 தொடக்கம் தினசரி சேவை!
யாழ்ப்பாணம்
திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!
இலங்கைச் செய்தி
யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
யாழ்ப்பாணம்
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > உலகச் செய்தி > காஸாவில் உள்ள மருத்துவமனையின் மீது தாக்குதல்! – 500 பேர் பலி!
உலகச் செய்தி

காஸாவில் உள்ள மருத்துவமனையின் மீது தாக்குதல்! – 500 பேர் பலி!

Last updated: 2023/10/18 at 9:26 PM
Published October 18, 2023 436 Views
Share
2 Min Read
SHARE

காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்ததாகவும் தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களே அதற்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அத்துடன் மோதலின் தொடர்ச்சியாக பொதுமக்கள் உயிரிழப்பது மிகவும் கவலைக்குரிய விடயம் எனவும் இந்திய பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிறுவர்கள், நோயாளிகள் என 500 பேர் வரை கொல்லப்பட்ட சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு உலக நாடுகள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளன.

காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது நடந்த தாக்குதல் மற்றும் அதில் உயிரிழந்தவர்கள் குறித்து அறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இந்த துயரத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இஸ்ரேலை கண்டித்தும் அரசு நாடுகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

பாலஸ்தீனத்தின் காசா அல்-அஹ்லி மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் மருத்துவமனையில் தஞ்சமடைந்திருந்த 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தாக்குதலில் 100ற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுகின்றது.

இந்த துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பாலஸ்தீன அரசு 3 நாட்கள் துக்க தினமாக அறிவித்துள்ளது.

கடந்த 11 நாட்களாக தொடர்ந்து வரும் இஸ்ரேல் – ஹமாஸ் தாக்குதலில், தரை வழியாகவும் வான் வழியாகவும் இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகின்றது. இந்த தாக்குதலில் இது வரையில் 5000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தங்கள் பாதுகாப்பிற்காக மக்கள் இடம்பெயர்ந்தும், வெவ்வேறு இடங்களில் தஞ்சம் புகுந்தும் வருகின்றனர்.

காசா பகுதியிலிருந்து மக்கள் வெளியேற கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் இஸ்ரேல் விமான படை பலஸ்தீன் மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.

குறித்த தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 100 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இத்தகவலை ஹமாஸ் அமைப்பின் சுகாதாரத்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

 

 

You Might Also Like

ஈரான் – இஸ்ரோல் இடையே போர் நிறுத்தம் !

இந்தியாவால் உருக்குலையப் போகும் பாகிஸ்தானின் வாழ்வாதாரம்!

கனடாவில் இடம்பெற்ற குமுதினிப் படுகொலையின் 40வது ஆண்டுநினைவேந்தல்!

கனடாவின் பொதுப் பாதுகாப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகள் அமைச்சர்- ஹரி ஆனந்தசங்கரி

குடியேற்றச் சட்டங்களை மேலும் கடுமையாக்கும் பிரிட்டன்!

ஐபிஎல் தொடர் குறித்து புதிய தீர்மானம்!!

இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல்களை நிறுத்த இணக்கம் !

‘ஒப்பரேஷன் சிந்தூர்’ – தாக்குதலை நடத்தும் இந்திய ராணுவம் !

Anarkali October 18, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் பிறந்த நாள் கொண்டாடிய மேலும் ஐவர் கைது!
Next Article தமிழக மீனவர்கள் ஒன்பது பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர் தாக்குதல்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை 07 தொடக்கம் தினசரி சேவை!
திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!
யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!

You Might Also Like

உலகச் செய்தி

ஈரான் – இஸ்ரோல் இடையே போர் நிறுத்தம் !

June 24, 2025
உலகச் செய்தி

இந்தியாவால் உருக்குலையப் போகும் பாகிஸ்தானின் வாழ்வாதாரம்!

June 9, 2025
உலகச் செய்தி

கனடாவில் இடம்பெற்ற குமுதினிப் படுகொலையின் 40வது ஆண்டுநினைவேந்தல்!

May 20, 2025
உலகச் செய்தி

கனடாவின் பொதுப் பாதுகாப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகள் அமைச்சர்- ஹரி ஆனந்தசங்கரி

May 16, 2025
உலகச் செய்தி

குடியேற்றச் சட்டங்களை மேலும் கடுமையாக்கும் பிரிட்டன்!

May 12, 2025
உலகச் செய்தி

ஐபிஎல் தொடர் குறித்து புதிய தீர்மானம்!!

May 11, 2025
உலகச் செய்தி

இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல்களை நிறுத்த இணக்கம் !

May 11, 2025
உலகச் செய்தி

‘ஒப்பரேஷன் சிந்தூர்’ – தாக்குதலை நடத்தும் இந்திய ராணுவம் !

May 10, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?