ஈரான் நாட்டின் சபாநாயகர் தானே விமானத்தை செலுத்தி சென்றார்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் சமீபத்தில் பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது தானே விமானத்தை இயக்கியது தொடர்பான செய்தி உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முகமது பாகர் காலிபாப் ஒரு பயிற்சி பெற்ற மற்றும் சான்றிதழ் பெற்ற விமானி ஆவார். ஏர்பஸ் ரக விமானங்களை இயக்கும் தகுதி இவருக்கு உண்டு.

ஏப்ரல் 2026-ல், அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஈரான் தூதுக்குழுவுடன் இவர் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்திற்கு சென்றார்.

பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவிய போதிலும், அவர் தானே விமானத்தை இயக்கிச் சென்றது ஒரு துணிச்சலான செயலாகப் பார்க்கப்படுகின்றது.

அந்தப் பயணத்தின் போது, போரில் உயிரிழந்த குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் அவர்களின் பள்ளிப் பைகளை இருக்கைகளில் வைத்து, அவர்களைத் தனது “பயணத் தோழர்கள்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார்.

இவர் இதற்கு முன்னதாக 2024 அக்டோபரிலும், இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியில் தானே விமானத்தை ஓட்டிச் சென்று லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் தரையிறக்கி உலகையே வியக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Article
Leave a comment