‘
நாட்டையும் மக்களையும் வெற்றி பெறச்செய்வதற்காக இந்தப் புத்தாண்டில்அனைவரும் மேலும் வலிமையுடனும் ஒற்றுமையுடனும் ஒரே நோக்கத்துக்காகஒன்றுபடுவோம் என அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கின்றேன் என்றுஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விடுத்துள்ள சித்திரைப் புத்தாண்டுவாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பௌதீக மற்றும் ஆன்மீக ரீதியாக புதிதாகும் எதிர்பார்ப்புகளைஅடையாளப்படுத்தும், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை, நாடு என்ற வகையில்பல வெற்றிகளை அடைந்துகொண்டு, சிறந்த மற்றும் புதியதொரு தேசத்தைஉருவாக்கும் கனவுக்காக இடைவிடாமல் போராடும் வேளையில் நாம்கொண்டாடுகின்றோம்.
வீழ்ச்சியடைந்திருந்த நமது நாட்டை கடந்த சில மாதங்களாக மீண்டும்கட்டியெழுப்பி, பொருளாதார, சமூக, அரசியல் ரீதியாக புதிய நிலைக்கு உயர்த்திவைத்துள்ளோம். அந்த வெற்றிகள் அனைத்தும் இந்நாட்டு மக்களுக்கேஉரித்தாகும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் மக்கள் எம் மீதுவைத்த நம்பிக்கையே நாட்டில் மாற்றம் ஏற்படுவதற்கு வழிவகுத்தது என்பதையும்வலியுறுத்த வேண்டும்.
சவால்களுக்கு மத்தியில் சரிந்துவிடாமல் நாட்டுக்காக நமது பொறுப்பை மேலும்வலுவாக நிறைவேற்றும் துணிச்சல் எமக்கு உள்ளது. மேலும் பூகோள அரசியலைப்போன்றே தேசிய ரீதியாக நாட்டின் முன்பிருக்கும் அனைத்து விதமானசவால்களையும் எதிர்கொள்ளத் தேவையான திட்டங்களை அரசு தற்போதுசெயற்படுத்தி வருகின்றது.
மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான பௌதீக மற்றும் ஆன்மீகத்தொடர்புகளின் தனித்துவம் புத்தாண்டு மரபுகளினால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவை சிங்கள மற்றும் தமிழ் இனங்களுக்கு இடையில் காணப்பட்ட வரலாற்றுபிணைப்பு மற்றும் சகவாழ்வின் உயிர்ப்புள்ள சான்றாக விளங்குகின்றன.
இன்றைய சமூகம் பல்வேறு பிரிவுகளால் வேறுபட்டிருந்தாலும், புத்தாண்டுபோன்ற கொண்டாட்டங்கள் அத்தகைய பிரிவுகளைக் கலைந்து சமூகத்துக்குள்மீண்டும் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வைப் பாதுகாப்பதற்காகவேஉருவாக்கப்பட்டுள்ளன.
சகவாழ்வை ஊக்குவித்து மற்றவர்கள் மீது கருணை காட்டும் ஒழுக்கத்தின்இருப்பை எமக்குள் எற்படுத்திக்கொள்வதே இந்தப் புத்தாண்டில் நமதுபொறுப்பாகும்.
மேலும், மக்கள் வாழ்வைப் புதுப்பித்துக்கொள்ளவும் பிற்போக்கான மனப்பாங்குமற்றும் சிந்தனை அற்ற புதிய மனிதனை உருவாக்குவதுமே சூரிய பெயர்ச்சியுடன்இணைந்து மேற்கொள்ளப்படும் அனைத்து சம்பிரதாயங்களினதும் பொதுவானஎதிர்பார்ப்பாகும். இவ்வாறு நாம் புதிதாவதால் மாத்திரமே புத்தாண்டு நமதுவாழ்விற்கு புதிய ஆரம்பத்தை தரும்.
நாட்டுக்குத் தேவையான புதிய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் மாற்றத்தைஏற்படுத்துவதற்கான தேசிய திட்டத்தை வெற்றி பெறச் செய்வதற்காகவும், நாட்டையும் மக்களையும் வெற்றி பெறச் செய்வதற்காகவும் இந்தப் புத்தாண்டில்அனைவரும் மேலும் வலிமையுடனும் ஒற்றுமையுடனும் ஒரே நோக்கத்துக்காகஒன்றுபடுவோம் என அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கின்றேன்.
உங்கள் அனைவருக்கும் ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை‘ நோக்கியபயணத்தின் எதிர்பார்ப்புக்களை ஒளிரச் செய்யும் செழிப்பான புத்தாண்டாகஅமையட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்